- Sunday
- August 9th, 2026
வவுனியா நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற பெண்ணொருவர் அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
உலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் எற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
சமுர்த்தி அமைச்சினால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கும் செயலானது தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகும் என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். இந்த நியமனம் குறித்து நேற்றயதினம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
இலங்கையில் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் இலங்கையின் விசாரணை அதிகாரி ஒருவர் ஜாஸ்மின் சூக்காவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்திடம் [ITJP] சாட்சியம் வழங்கியுள்ளார். இது தொடர்பான அதிர்ச்சி நிறைந்த அறிக்கை ஒன்றை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 1.05.2018 அன்று நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் அனைத்து தொழிற் சங்கங்கள், பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். இடம் :- கிட்டு பூங்கா...
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவத்துள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி...
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழாவில், சிறப்பு அதிதியாக...
ஒட்டுசுட்டான், கற்சிலைமடுப் பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக அக்காணி உரிமையாளரான சமாதான நீதவான் கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சான்றுப் பொருட்களை அழித்துவிட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்க இராணுவத்தினர் முயன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, “எனது காணிக்குள் மிகவும்...
முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என...
கிளிநொச்சி – பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது. சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கினார். அக்காணியில் நிலமட்டத்திலிருந்து சுமார் 35 அடி கீழ்நோக்கிச்...
எதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழர் தாயகத்தின் முன்னேற்றத்தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்படுகின்றது....
கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர். எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லை. இதனையடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ந்ததோடு, அங்கு காணப்படும் தமது கட்டங்கள், மரங்கள் என்பவற்றை ஆரத் தழுவியுள்ளனர். இரணைதீவை விடுவிக்க...
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அரச நிர்வாகம் முடக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...
மயக்க நிலையில் 18 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இருந்தே மேற்படி இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே சுவாச கோளாறு காரணமாக மயக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாகவே பெருமளவு நீர் இழக்கபட்டு மயக்கநிலை அடைந்ததாக வைத்தியசாலை...
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கமும் நீதிமன்றங்களும் தயக்கம் காட்டி வருகின்றன எனவும் அந்த அறிக்கையில்...
இரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை. மனித உரிமைகள் பேரவையை விட்டுவிட்டு மாற்றுவழிவகைகள் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று ஐ.நா அனித உரிமைகள் ஆணையர் குறிப்பிட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்வரும் 2019 மார்ச் மாத்துக்கள் பாதிக்கப்பட்ட...
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக "சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம்,...
சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலர் எமது கட்சியுடன் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுக்கள் எதுவும் நடத்தவில்லை என்று கூறுவதானது “ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி கடந்த பின்னர் நீயாரோ நான்யாரோ” என்ற கதைபோல் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்...
Loading posts...
All posts loaded
No more posts
