Ad Widget

இலங்கையின் பொறுப்புக்கூறல் நகர்வுகளில் முன்னேற்றமில்லை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையின் பொறுப்புக்கூறல் நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஆணையாளரினால் ஜெனிவாவில் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

”இலங்கையில் இன ரீதியாக சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து, நாடளாவிய ரீதியில் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளேன்.

இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும். அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் இல்லாமையையிட்டு நான் கவலையடைகிறேன். பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறு கால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது.

இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன். இதுதொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts