யாழில் இந்து ஆலயம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


