Ad Widget

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !!

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (01.03.2018) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

அதன்போது அங்கு இணைத்தலைவர் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரதிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

தமிழரசுக் கட்சியில் அங்கம்வகித்துவந்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினாலேயே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் அமைச்சுப் பதவியிலி் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts