விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி...

கணித, விஞ்ஞானத்தில் 40 சதவீத சித்தியை எட்டவேண்டும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் வடமாகாணத்தில் 18 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் தற்போது சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டு கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம்...
Ad Widget

பாலியல் துஸ்பிரயோகம்; வரணி ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வரணிப் பகுதி பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைப்பதற்காக செயற்பட்ட பழைய மாணவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை...

போதைப் பாவனையால் யாழ். நகர பாடசாலை மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது! நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நகர்ப் புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது எனக் கவலை வெளியிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அத்தகையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு...

யாழ்ப்பாணத்தில் களிமண் சிற்பப் பயிற்சி நெறி

திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள களிமண் சிற்ப பயிற்சிநெறி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெறுமனெ அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் இப்பயிற்சி நெறி ஆரம்பிகப்பட்டுள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடம் வடமாகாணத்தின் முதலாவது ஓவியக்கூடமாக யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டு மூன்றாவது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன்...

மல்லாவியிலும் மாணவி துஷ்பிரயோகம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து...

பாலியல் வதை புரியும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல்...

மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கிய அதிபர்!!

பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் வகுப்பறையில் குழப்படி செய்தமைக்கு, தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கியுள்ளார்....

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தடை தாண்டல் பரீட்சை!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சை ஜுலை மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற உள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அரச நிர்வாக சுற்றறிக்கை இல 16/2016 மற்றும் ஒன்றிணைந்த சேவை...

தனியொரு மாணவன், மாணவிக்கு பாடசாலையில் விசேட வகுப்பு நடத்த தடை!

தனியொரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர மற்றும் விடுமுறை நாள் விசேட வகுப்புக்களை பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா...

மாணவிகளுடன் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்த ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும்...

மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர்; பெற்றோர் போராட்டம்

யாழ்.காங்கேசன்துறை வீதியில் உள்ள பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பாக வலய கல்வி பணிமனை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த...

மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம்

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்...

யாழ் பிரபல பாடசாலையில் 05 மாணவிகள் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பிரபல பாடசாலையில் 12 வயது நிரம்பிய 05 மாணவிகள் அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபரிற்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய பாடசாலை...

மாணவர்களை கௌரவிக்க மறுத்த பாடசாலை அதிபருக்கு அழைப்பாணை!

மாணவர்களை கௌரவிக்க மறுத்த அதிபர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபரின் செயற்பாட்டால், குறித்த கல்லூரில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மாணவர்களின் பெற்றோரால் மனித உரிமை...

நெசவுப் பாடசாலைக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் மாவட்ட அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன. இந்தக் கற்கைநெறிக்கு 6 மாதகாலம் மற்றும் 1 வருட காலம் என்று இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளனர். ஒரு வருட கற்கை நெறியைப் பயிலுவதற்கு, க.பொ.த. சாதாரண தரப்...

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் இடைவிலகல் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் இடைநிலை வகுப்புக்களின் முக்கிய பாடங்களான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு தொடர்ந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருவதால், பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்து வருவதாக, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, 'நான் வலயக் கல்விப் பணிப்பாளராக...

மாணவி துஷ்பிரயோகம் : அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

தென்மராட்சி - வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நன்னடத்தைப்பிரிவினரிடமும், கொடிகாமம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை!

கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்ட போது அதில் பாரபட்சம் காட்டப்பட்டது, பெரும்பான்மை பாடசாலைகளுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை பாடசாலைகளுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது, ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே எமது கல்வியின்...

வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு தொழிற்பயிற்சி

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியின் மூலமாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் அணுசரனையில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் ஆகியோருக்கான தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வீட்டு மின் உபயோகப் பொருள்களை திருத்துதல், தையல் வேலை ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும்...
Loading posts...

All posts loaded

No more posts