பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய...

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு

இம்முறை (2016ம் ஆண்டுக்கான) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கால எல்லை எதிர்வரும் (ஜூன்) 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Widget

25 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டது வறுத்தலைவிளான் பாடசாலை

வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம்...

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி ஜூன் 2 முதல் சொந்த இடத்தில் இயங்கும்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்...

சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத்...

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்

அடுத்த வருடம் தொடக்கம் ஒன்லைன் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தபால் மூலம் விண்ணப்பிப்பதனால் ஏற்படும் நேர தாமதத்தை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அறிவகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலையங்களினூடாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும் என்றும்...

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பு

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதன் பிரகாரம் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர்...

புகைப்பிடித்தலுக்கு எதிரான தின கட்டுரைப் போட்டி

சர்வதேச புகைப்பிடித்தலுக்கெதிரான தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சு மற்றும் புகையிலை போதைப்பொருள் தொடர்பான தேசிய அதிகார சபை என்பன கூட்டாக இணைந்து பாடசாலை மாணவர்களிடையில் கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளன. இப்போட்டியில், ஆரம்ப பிரிவைச் சேர்ந்த 3ஆம், 4ஆம் தர மாணவர்களிடையே 'புகைபிடிக்காத எனது அப்பா எமது சொத்தாகும்' என்னும் தலைப்பிலும், கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த 6ஆம்...

கொடூர பகிடிவதை- இடைநடுவில் கல்வியை கைவிட்ட மாணவி!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார். இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார். பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை...

தாமதமாக பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களை தண்டித்த அதிபர்

கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...

பகிடிவதை தடைசெய்யப்பட்ட ஒன்று என மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தை மீற எவருக்கும் இடமில்லை எனவும், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அல்ல ஒன்றிரண்டில் பகிடிவதை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. உலகில் எங்கும் இதுபோன்ற பகிடிவதைகள்...

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...

விண்ணப்பம் கோரல்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடக வேலைத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஊடகத்துறையில் ஆர்வமும் விருப்பும் கொண்ட இளம் ஊடகவியலாளர்களை வலுவூட்டும் நோக்கில் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஊடக வேலைத்திட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்காக, நேர்முகப்பரீட்சை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் ஒரு பிரிவில் 50 பேருக்கு விரிவுரைகள் மற்றும் செயன்முறை...

பாடசாலை மாணவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு,...

வட மாகாணத்திலும் 12.30 மணியுடன் பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால்...

12 மணிக்கு பாடசாலை மூடுவதை இரத்துச் செய்யுமாறு அரசு அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ண நிலையைக் காரணங்காட்டி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளை நண்பகல் 12.00 மணிக்கு மூடும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சும்,சுகாதார அமைச்சும் வலியுறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் வெப்ப காலநிலையில் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை...

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக கற்கைகளுக்கு மாணவர்கள் உட்சேர்ப்பு பற்றி SLIIT அறிவிப்பு

தேசத்தின் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமான, இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டக்கீழ் படிப்புகளுக்கான ஜுன் 2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) பட்டம் என்பது தகவல் தொழில்நுட்பம், தகவல் கட்டமைப்புகள்...

நாளை முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம்

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேடுகளை நாளை 24 ஆம் திகதி முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இந்த கையேட்டைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்காக...

பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால் கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது

பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால்  கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது இது பற்றி தெரியவருவதாவது. பழைய மாணவர் சங்கங்களுக்கு தலைவராக அதிபர் தான் இருக்கவேண்டும் என்ற வகையிலான சுற்றறிக்கை ஒன்று வடமாகாணசபை கல்வியமைச்சினால் அனுப்பட்டிருப்பதாகவும் அதனை காரணம் கூறி பாடசாலையில் சங்க பொதுக்கூட்டத்தினை நடாத்துவதாயின் அதிபரை தலைவராக்க வேண்டும் என்ன வற்புறுத்தியதால் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவுள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts