யாழ்.இந்து கல்லூரி அதிபர் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்கு 50...

யாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை – கல்வி அமைச்சு

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இந்த...
Ad Widget

புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 500 ரூபாய் கொடுப்பனவு 750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வருடாந்தம் 1,30,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றனர் என்பது...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வடக்கு மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் கோரல்!!

வடமாகாண பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக விபரங்களை http://WWW.edumin.np.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து...

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் எழுந்துள்ள சிக்கல்!

புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில் பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில், பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்த வினாத்தாளின் 6ஆவது கேள்வி, 3ஆம், 4ஆம் அல்லது...

விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து சேவை!!

வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய...

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் வழங்கியுள்ளார். இந்தச் சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலை நடத்தப்படவேண்டும். பதில் பாடசாலைக்கான...

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக...

மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்...

உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டையை இணையத்தில் தரவிறக்க முடியும் – பரீட்சைகள் திணைக்களம்

2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இதவரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. https://doenets.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தில்...

பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாகியது

பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில்  ஒன்றுகூடினர். பழைய மாணவர் சங்கங்களின்...

அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை!

கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சை, மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தலை வெளியிடுவதில்லையென அரசு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1,050 பாடசாலைகளில் Wi-Fi வலயம் அமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!!

நாட்டிலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். “உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி (laptop) வழங்கப்படவுள்ளது. அதனால் அவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்துவதற்கான வசதியும் கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய முதல்கட்டமாக ஆயிரத்து ஐம்பது...

காலை எட்டு மணியை கடந்தும் ஏ9 வீதியில் காத்திருக்கும் மாணவர்கள்!

பாடசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டு ஏ9 பிரதான வீதிக்கு வருகின்ற போதும் பேருந்து ஏற்றிச்செல்லாத காரணத்தினால் காலை எட்டு மணியை கடந்தும் வீதியில் காத்திருக்கும் அல்லது வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலைமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உமையாள்புரம், பகுதிகளில் இருந்து கிளிநொச்சி நோக்கி சில பாடசாலைகளுக்கு செல்கின்ற...

இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் இராஜாங்க...

அதிபர் திட்டியதில் மயக்கமுற்ற ஆசிரியை வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...

யாழ் இந்து மாணவன் சிங்கப்பூர் பயணமாகிறார்!!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற ‘மூளை முகாம்’ (Brain Camp) என்ற விஞ்ஞான ஆய்வு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து பங்குபற்றும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவு செய்ப்பட்டுள்ளார். சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம் (STEP) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு பயிற்சித்திட்டத்தை நடத்துகின்றன. ஜூன்...

பாடசாலைகளின் பாதுகாப்பு பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை!!

பாடசாலைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பாதுகாப்பை வழங்கும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றோரை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில்...

கிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை...

மாணவர்களின் உணவை படையினர் கைகளால் சோதனையிடுகின்றனர் – பெற்றோர் கவலை

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts