Ad Widget

டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!!

பரவிவரும் டெங்கு தொடர்பில் மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர முதல்வரினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில்

தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கடந்த 10ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் உயர்திரு. என். வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலீஸார் எனப் பல அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானமாவது ‘டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியப்பாடுகள் தனியார் கல்வி நிலையங்களில் அதிகம் காணப்படுவதனால் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு வாரங்களுக்கு சகல தனியார் கல்வி நிலையங்களையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரவலான கருத்து முன்வைக்கப்பட்டது. குறித்த கருத்து தொடர்பில் ஆராய்ந்த பின்னர் தனியார் கல்வி நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவது’ என தீர்மானிக்கப்பட்டது.

Related Posts