எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது!!

பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடாத்தப்படும்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் என்பன திட்டமிடப்பட்டவாறு நடாத்தப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் குறித்த பரீட்சைகளைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு பிள்ளைகளை...
Ad Widget

படையினரின் துணையுடன் பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர்களின் வருகையில் கடும் வீழ்ச்சி

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது. அந்தவகையில் இரண்டாம் தவணைக்கான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், பின்னர் தாக்குதல் அச்சுறுத்தல் நீக்கப்பட்டிருந்த...

மேலதிக நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது!

நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2 வார கால கல்வி நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் மற்றும் பரீட்சை செயற்பாடுகள் வழமைப் போன்று சாதாரண முறையில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

இலங்கையில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கே இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை...

பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு இராணுவ மயமற்ற பாதுகாப்பு நடவடிக்கை

வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு பொதுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கு மாகாணத்தில் 339...

பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி திங்கட்கிழமை திறப்பு!

பாடசாலைகள் இ பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி திங்கட்கிழமை திறக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: தேசிய பாதுகாப்பு சபை கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள்...

பாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்க வற்புறுத்திய கல்விப் பணிப்பாளர்!! விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!!!!

யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு...

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது!

019ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 22ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் சித்தியடைந்தோர் வீதம் குறைவு!! வேம்படி பெறுபேறுகளில் முதலிடத்தில்

2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களில் முதல் பத்து இடங்களுக்குள் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் இடம்பிடிக்கவில்லை. அத்துடன், வடக்கு கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 ஆயிரத்து 495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு – 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனைத்து பாடங்களிலும் A சித்தி!

2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும்...

புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....

வடக்கில் 14 பாடசாலைகளை தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை!!!

வடக்கு மாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த தகவலை மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஆசிரியர் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதிபர்கள், இலங்கை கல்வி சமூக சம்மேளனம், உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புபட்ட 30 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர்,...

யாழ். பல்கலையில் பகிடிவதை தொடர்கிறது – மாணவர் ஒருவர் படிப்பை இடைநிறுத்தினார்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும், தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி...

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்துக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது. எந்த காரணத்தையும் கொண்டும்...

செவ்வாயன்று வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை!

வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காவே பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார். மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் தெரிவித்த ஆளுநர் இத்தினத்திற்கான பதில் பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும்...

யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம்: பொலிஸாரின் பாரபட்சம் குறித்து விசனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து...

யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபரின் மோசடிக்கு அதிகாரிகள் துணை!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார். வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts