Ad Widget

வடமாகாணத்தில் ஊ.சே.நிதியத்தில் 902 நிறுவனங்கள் இணைப்பு: பிரதித் தொழில் ஆணையாளர்

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதிய திட்டத்தில் 3,164 தொழில் நிறுவனங்கள் கடந்த வருடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண அஞ்சல் சேவையில் 10,355 மில்லியன் ரூபா வருமானம்

வடமாகாண அஞ்சல் திணைக்களம் 10,355 மில்லியன் ரூபா வருமானத்தினை கடந்த வருடத்தில் ஈட்டியுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Ad Widget

ஜனவரி 18 முதல் யாழ்ப்பாண சர்வதேச விற்பனை கண்காட்சி ஆரம்பம்

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. (more…)

நல்லூர் பிரதேச சபை வரிகளை அதிகரித்தது!

நல்லூர் பிரதேச சபை தனது ஆட்சியின் கீழ் வரும் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் நிலையங்கள் நிறுவனங்களுக்கான வருடாந்த வரியினை இவ்வருடம் அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த காலங்களில் 800 ரூபா அளவில் இருந்த வரிகள் கூட இம்முறை 3500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகரிப்பு வீதமானது மிகவும் அதிகமானதாக காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் மட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

எரிவாயு விலை நள்ளிரவுமுதல் அதிகரிப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 150 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. (more…)

யாழ். முகாமையாளர் சம்மேளனக் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் முகாமையாளர் சம்மேளனத்தின் 100ஆவது கலந்துரையாடல் நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.ஆரம்பத்தில் வங்கித்துறையினரைக் கொண்டு நடத்தப்பட்ட முகாமையாளர் சம்மேளனக் கலந்துரையாடல் பின்னர் படிப்படியாக பொறியியலாளர்கள், (more…)

வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்து

வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார். (more…)

மீளச் செலுத்த முடியும் என்றால் கடன் பெற்று தொழில் செய்யுங்கள்; நெல்லியடி வணிகர் கழகம் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்து

கடன்களைப் பெற்றுத் தொழில் செய்யும் போது கடனுக்கு உரிய வட்டியும் செலுத்தி இலாபமும் கிடைக்குமாயின் கடன்பெற்று தொழில் செய்யலாம். கடனைப்பெற்று அதற்குரிய வட்டியையும் முதலையும் செலுத்த முடியாது என்று தெரிந்தும் கடனைப் பெற்று விட்டு தலைமறைவாகுவது ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும். எனவே வர்த்தகர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும். (more…)

இலங்கையிலேயே தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம்!

இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 - ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது. (more…)

என்.ஆர்.எவ்.சி. மற்றும் ஆர்.எவ்.சி. கணக்கு விதிகளில் தளர்வு

வெளிநாட்டு நாணயங்களை சம்பாதிப்பவர்கள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (என்.ஆர்.எவ்.சி) வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (ஆர்.எவ்.சி) இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விதி திங்கட்கிழமை(9) முதல் அமுலுக்கு வருகிறது. (more…)

வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்ள சுப்பர்மார்கெட்டுகள் அனுமதிக்கப்படும்

சுப்பர்மார்கெட்டுகள், குத்தகை மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் நாணயமாற்றுக் கட்டுப்பாட்டு அதிகாரியான பி.எச்.ஓ. சந்திரவன்ஸ நேற்று கூறினார்.உள்ளூரில் மாற்றப்படும் ஸ்ரேலிங் பவுண், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் மத்திய வங்கியை அடைவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 61 வெளிநாட்டு...

யாழில் மாம்பழ சீஷன்!

யாழ்.குடாநாட்டில் தற்போது தென்னிலங்கையிலிருந்து அப்பிள், அன்னாசி, தோடம்பழம், மங்குஸ்தான், றம்புட்டான் போன்ற பழங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றபோதும் யாழ்ப்பாண மாம்பழத்திற்கான மவுசு இன்னமும் குறையவில்லை.கறுத்தக் கொழும்பான், விளாட்டு, அம்பலவி ,வெள்ளைக்கொழும்பான், செம்பாட்டான் போன்ற மாம்பழ வகைகள் தற்போது திருநெல்வேலிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. (more…)

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் தடங்கல்!

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தத்தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரெலிகொம் இன் தொழில்நுட்பப்பிரிவில்...

சண்டெல் நிறுவனத்தை வாங்குகிறது டயலொக்

இலங்கையின் முன்னிலை செல்லிடத் தொலைபேசி நிறுவனமான டயலொக் அக்ஸியா நிறுவனம், சிடிஎம்ஏ தொலைபேசி நிறுவனமான சண்டெல் பிரைவேட் லிமிடெட்டின் 100 சதவீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான பேரங்களை பூர்த்திசெய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தன. (more…)