மாவீரர்களை நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும்!

மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். “தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு. தமிழீழமா சமஸ்டியா என்னும் கேள்வியுடன் தொடர்ந்தும் காலத்தை வீணாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதை விடுத்து, வடக்கையும் கிழக்கையும் நிர்வகிக்கக்...

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு விஜயம்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவினர், நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர். அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள அவர்கள், அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அங்கு மேற்கொள்ளப்படும் வீடமைப்பு, மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் குறித்தும் அவர்கள் நேரில் சென்று கேட்டறிந்துள்ளனர்....
Ad Widget

ஐங்கரநேசன் ஒரு பனங்காட்டு நரி-சுமந்திரன் தரப்பிற்கு முதல்வர் பதிலடி(காணொளி)

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில்...

எமது நிலத்தை இராணுவம் கையகப்படுத்தி அனுபவிக்கின்றது! – வடக்கு முதல்வர்

எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த...

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...

கேப்பாபிலவு மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றுமாறு வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் 45ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றய தினம் வடமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரேரணையினை சபையில் முன்மொழிந்திருந்தார். குறித்த பிரேரணை...

பரந்தன் – முல்லை பிரதான வீதியில் 35 ஏக்கர் காணி இராணுவத்தால் சுவீகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பரந்தன்...

வன்னி இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31...

இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம் – சிறிதரன்

இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவிக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினால் நேற்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும்...

குடும்ப பெண்ணை கடத்த முயற்சி : முதலாவது சந்தேகநபருக்குப் பிணை

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேக நபரை கடும்நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) அனுமதித்தார். ஏனைய நான்கு சந்தேக நபரையும் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கிளிநொச்சி, கண்டாவளை பகுதியில்...

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்று வந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாக, இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில், கோப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தங்கள் வயல் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, கொக்குத்தொடுவாயை பகுதி மக்கள், முல்லைத்தீவு...

வௌிநாட்டு முதலீட்டாளர் உதவியுடன் வடக்கில் புதிய வாய்ப்புக்கள் – முல்லைத்தீவில் ஜனாதிபதி

வடக்கு இளைஞர் யுவதிகளின் பிரச்சினையாகவுள்ள தொழில் பிரச்சினைக்குத் தீர்வாக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளை எதிர்காலத்தில் வட மாகாணத்தில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹைத்ரமணி ஆடைத்தொழிற்சாலையை நேற்று முற்பகல் திறந்துவைத்து உரையாற்றும்...

ஈழ மகா காவியம் எழுதுவேன்! முல்லைத்தீவில் வைரமுத்து உருக்கமான பேச்சு

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என, குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என்...

முள்ளியவளையில் உழவர் பெருவிழா ! – கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்பு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...

பணம் இல்லாததால் இரு நாட்கள் வைத்தியசாலையில் காத்திருந்த சடலம்!

குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்....

காணாமற்போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் வியாழனன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனோரின் உறவினர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரில் பெருமளவானோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தமையை கூட்டமைப்பு ஆட்சேபிக்கவில்லை என்று கூறியும், அதனைக் கண்டித்தும், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம்...

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! – கிளிநொச்சியில் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள்,...

இரண்டு வருடங்களுக்கு முன் காணாமற்போன கிளிநொச்சி சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுவன் பத்தரமுல்லை நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசித்து வந்த 16 வயதான ஜேசுநாயகம் நிமலேந்திரன் என்ற சிறுவனே நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பாடசாலைக்கு வர வேண்டாம் என்று மறுக்கப்பட்டதனால் வீடு செல்ல...

பூநகரியில் 860 ஏக்கர் காணி சிங்களவர்க்கு விற்பனை! புதைக்கப்பட்ட சடலங்கள் ‘புதையல் பூஜை’ போர்வையில் அகற்றல்?!!

பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை...

தொழில் வாய்ப்பின்றித் தவிக்கும் முன்னாள் போராளிகள்!

போர் முடிந்து 7 வருடங்களாகியும் பெருமளவான முன்னாள் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர் என்று செய்திச்சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற முன்னாள் போராளியை கோடிட்டுள்ள செய்திச்சேவை, அரசாங்கத்தின் புனர்வாழ்வு மையத்தில் 3 வருடங்களை கழித்த அவர், தற்போது தொழில் வாய்ப்பின்றி உள்ளார் என்று தெரிவித்துள்ளது. புனர்வாழ்வின் போது...
Loading posts...

All posts loaded

No more posts