Ad Widget

பணம் வசூலிக்க மல்லாவி சென்ற யாழ் இளைஞர் கொலை?

கரவெட்டியை சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்பவர் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார். கிளிநொச்சி 155ம் கட்டைப் பகுதியில் உள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றும் உதயநிலவன் நேற்றுக் காலை மாதாந்த பணத்தை பெறுவதற்காக மல்லாவி சென்றுள்ளார்.

பணத்தை வசூலிக்கச் சென்ற போது அவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அடிபட்டதனால் இறந்ததாகவும் அவர் அருந்திய குளிர்பானத்தில் நஞ்சு கலந்து வழங்கப்பட்டதனால் இறந்ததாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இது தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Posts