பணம் வசூலிக்க மல்லாவி சென்ற யாழ் இளைஞர் கொலை?

கரவெட்டியை சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்பவர் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார். கிளிநொச்சி 155ம் கட்டைப் பகுதியில் உள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றும் உதயநிலவன் நேற்றுக் காலை மாதாந்த பணத்தை பெறுவதற்காக மல்லாவி சென்றுள்ளார். பணத்தை வசூலிக்கச் சென்ற போது அவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை...

இருப்பவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?- கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம்பெற கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம் சேயாவின் கொலைக்கும் பத்து வயது சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின் கொலைக்கும் என்ன பதில் கூறப்போகின்றது. இத்தகைய கொடூரமான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க போகின்றதா? அல்லது இவ்வாறான...
Ad Widget

மாணவி தற்கொலை முயற்சி!! : ஆசிரியருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் மாணவி ஒருவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என சந்தேகிக்கப்படும் கிளிநொச்சி பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ். சிவசுப்ரமணியம் முன்னிலையில் கிளிநொச்சி பொலிசார் ஆஜர்ப்படுத்தினர். இதனை அடுத்து எதிர்வரும் நான்காம் திகதிவரைக்கும் குறித்த...

கிளிநொச்சியில் கால்நடைத்தீவன உற்பத்திப் பயிற்சி

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளுக்குரிய பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி கடந்த வியாழக்கிழமை (18.02.2016) கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாகப் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 14 கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தலா 70,000ரூபா பெறுமதியான புல் நறுக்கும்...

வன்னி பிரதேச பாடசாலை விடுதிகளில் தங்கியுள்ள ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்

வன்னிப் பிரதேசங்களில் கடமையாற்றுகின்ற பல ஆசிரியர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்து தமது அர்ப்பணிப்பான சேவையைச் செய்து வருகின்றனர். அதிலும் அனேக ஆசிரியர்கள் பெண்களாகும். இவர்கள் தங்கியுள்ள விடுதிகள் இரவு நேரங்களில் தட்டப்பட்டு அங்குள்ள ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவம் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த பெண் ஆசிரியர்களின் விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடுதிக்கு அருகில் இராணுவ முகாம்...

வவுனியாவில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சிறுமி: துஷ்பிரயோகத்திற்கு பின் கொலை

வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமி,துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா அவசர மரணபரிசோதகர் நேற்று தீர்மானித்துள்ளார். குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி பாடசாலைக்கு செல்ல முடியாது என கூறி வீட்டில் இருந்துள்ளார்.எனினும் அவரது மூத்த சகோதரன் பாடசாலைவிட்டு வீட்டிற்கு வந்த...

கிளிநொச்சியில் சிறுமி தற்கொலை முயற்சி!!

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய குறித்த மாணவி நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் கிணற்றில் மாணவி பாய்ந்த சத்தத்தை அறிந்த அயலவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் குறித்த...

முழங்காவிலுள்ள 5 குளங்களை பெரிதாக்கினால் குடிநீர்ப் பிரச்சினை தீரும்

முழங்காவிலுக்கும் பூநகரி பிரதேசத்துக்கும் இடையில் இருக்கும் 5 குளங்களையும் பெரிதாக்கி, கடலுக்கு வீணாகச் செல்லும் நீரை அந்தக் குளங்களில் சேகரித்தால் பூநகரி, யாழ்ப்பாணம் ஆகியவற்றின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்....

மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்படையினர் இருவர் கைது

தடைச்செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி முழங்காவில் கிரிந்திதீவு கடலில், மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கை செய்யப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முழங்காவில் கடற்படை முகாமையைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளத்தில் விபத்து: அறுவர் படுகாயம்!!

மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட...

சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை 58-ம் படையணி ஒப்படைக்க வேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்தே, அந்த பெயர்ப் பட்டியல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க...

இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு

இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும்...

மாவீரர்களை நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும்!

மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். “தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு. தமிழீழமா சமஸ்டியா என்னும் கேள்வியுடன் தொடர்ந்தும் காலத்தை வீணாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதை விடுத்து, வடக்கையும் கிழக்கையும் நிர்வகிக்கக்...

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு விஜயம்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவினர், நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர். அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள அவர்கள், அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அங்கு மேற்கொள்ளப்படும் வீடமைப்பு, மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் குறித்தும் அவர்கள் நேரில் சென்று கேட்டறிந்துள்ளனர்....

ஐங்கரநேசன் ஒரு பனங்காட்டு நரி-சுமந்திரன் தரப்பிற்கு முதல்வர் பதிலடி(காணொளி)

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில்...

எமது நிலத்தை இராணுவம் கையகப்படுத்தி அனுபவிக்கின்றது! – வடக்கு முதல்வர்

எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த...

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...

கேப்பாபிலவு மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றுமாறு வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் 45ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றய தினம் வடமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரேரணையினை சபையில் முன்மொழிந்திருந்தார். குறித்த பிரேரணை...

பரந்தன் – முல்லை பிரதான வீதியில் 35 ஏக்கர் காணி இராணுவத்தால் சுவீகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பரந்தன்...

வன்னி இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31...
Loading posts...

All posts loaded

No more posts