Ad Widget

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு...

கிளிநொச்சியில் 14வயது சிறுமி பாலியல் வன்புனர்வு!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டள்ளதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை...
Ad Widget

இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

வயல்களுக்குப் பாதுகாப்பு வேலி அமைக்க புங்குடுதீவு விவசாயிகளுக்கு முட்கம்பிச் சுருள்கள்

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக்...

மாணவர்கள் தாக்குதல் : மூவருக்கு பிணை

கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி...

யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை மக்கள் கைவிட்டுச் செல்ல நேரிட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பொது மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவின் அநேகமான இடங்களில் இந்த...

கிளிநொச்சியில் இதுவரை 19 பேரை பலியெடுத்த ரயில்!

பாதுகாப்பான ரயில்வே கடவையை அமைத்துத் தரக் கோரி கிளிநொச்சியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட முறிகண்டி முதல் முகமாலை வரையான பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததனால் இதுவரை 19 பேர் ரயிலில் மோதி பலியாகி...

மாணவர்கள் மீது தாக்குதல்; அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு

தனது அலைபேசியை திருடியதாகக் கூறி, 6ஆம் தர மாணவர்கள் மீது 9ஆம் தர மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஸ்கந்தபுரத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலை அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்...

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஆரியரத்னா வசந்தன் (வயது 20) எனும்...

இரணைமடுத் திட்டமே யாழ்.மாவட்ட குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! – ஹக்கீம்

"யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்'' என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும்...

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி முதியவர் பலி

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி உதயநனகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி (76) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அருகில் உள்ள கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு...

கிளிநொச்சியில் சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராவார். இவரை...

யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவனின் கண்டுபிடிப்பு!

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டிய படி வாய்க்கால் அமைக்க உதவும். கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மாணவன் சிறு வயது முதல் கல்வியிலும் ஏனைய இணைபாட விதான...

கிளிநொச்சியில் போக்குவரத்துகள் சீர்குலைந்துள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, குறித்த மாவட்டத்துக்கான போக்குவரத்துகள் சீர்குலைந்துள்ளன. கிளிநொச்சி மேற்குக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், கோணாவிலின் தாமரைக்குளம், அக்கராயன்குளம், அக்கராயன் பாலங்குளம், வன்னேரிக்குளம் ஆகிய குளங்களிலிருந்து பாய்கின்ற வான் வெள்ளங்களைக் கடந்தே முழங்காவில் வரை பயணிக்க வேண்டியுள்ளன. பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து வேரவில் செல்லும் பஸ்களும் மழைவெள்ளம் வீதிக்கு குறுக்காக...

பனிக்கன்குளம் பாடசாலை வீதி எப்போது புனரமைக்கப்படும்

முல்லைத்தீவு,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் வீதி கடந்த 30 வருடங்களுக்காக புனரமைக்கப்படாதுள்ளதால் அவ்வீதி வழியே பயணிக்கம் பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 1960ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இப்பகுதியில் மக்கள் குடியேறிய இந்த பகுதியில் இதுவரை...

ஜெயகுமாரியின் ஆவணங்களை மீள ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, விசாரணைக்கு தேவைப்படாத பொருட்களை அவரிடம் மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது...

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்யும் அடையால் அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், சிவபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையினால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உயர்வான இடங்களிலுள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்க உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து...

கிளிநொச்சியில் பரீட்சை எழுதும் மாணவர்கள் மழையினால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பரீட்சை மண்டபங்களிலும் இருள் சூழ்ந்த நிலைமை காணப்படுவதனால் மாணவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கினர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 3261 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2286 தனிப்பட்ட...

முல்லைத்தீவில் படையினர் வசமாக 13,487 ஏக்கர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம், 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல், படையினர் வசமுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்ள நிலங்களில், காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக்காணிகளாக, 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, 1983ஆம் ஆண்டு...

முல்லை பிரசாந்தின் குருதிபடிந்த மண் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு

Loading posts...

All posts loaded

No more posts