Ad Widget

கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழினியின் நூல்களின் அறிமுக விழா!

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமரன் எழுதிய “ஒரு கூர்வாளின் நிழல் ” (போராட்ட குறிப்புக்கள்) மற்றும் “போர்க்காலம்” (கவிதை தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் பொன். காந்தன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

நூலின் வெளியீட்டு உரையினை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்தினார். நூலினை முன்னாள் போராளி திருச்செல்வம் சிவமலர் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் செந்தூரன் பெற்றுக் கொண்டார்.

kili-tamilini-book-2

kili-tamilini-book-1

Related Posts