Ad Widget

மீண்டும் வவுனியாவில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகளைப் வவுனியா மற்றும் கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts