- Tuesday
- May 13th, 2025

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பதவியை சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கவுள்ளார் என்ற வதந்தியினை இணையத்தளம் ஒன்று பரப்பிவருகின்றது. அதில் எந்தவித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றன. மேலும் போனஸ் ஆசனங்கள் அமைச்சர் தெரிவுகள் தொடர்பிலும் வதந்திகைள் உலாவருகின்றன. அதற்காக சிலர் பொது அமைப்புகள் ஊடாக கூட்டமைப்பின் தலைமையிடம் சிபார்சுகளை அனுப்பிவருவதாக கூட...

வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....

நடந்து முடிந்த வட மாகாணசபைத் தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு விபரங்கள் மாவட்ட வாரியாக ஒரே பார்வையில் (more…)

நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்)இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடியதன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னைஉங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும்அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியைஎப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும்உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான்அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது...

தமது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு அந்த காயம் மறைவதற்குள் கொலையாளியிடம் நிவாரணங்களை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் கொலையாளியுடன் புகைப்படத்திற்கு காட்சி கொடுக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்கு வடபகுதி தமிழர்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர். இவ்வாறு சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.படுகொலையாளிகளுடன் எந்த இணக்கமும் இல்லை என்பதை தமிழர்கள் வெளிகாட்டியுள்ளனர் என அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆசிரியையை...

அமையவுள்ள வடமாகாணசபை அரசில் முதலமைச்சரால் 4 அமைச்சர்கள் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் இருந்து நியமிக்கப்படுவர்.அந்த நான்கு அமைச்சர்களும் யார் என இப்போதே ஆதரவாளர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.அவற்றுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவே்ணடிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கிறது. அவர்கள் முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடிவர்களாகவும் துறைசார்ந்த விற்பன்னர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது.அதேவேளை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் சமாதானப்படுத்தவேண்டியும் இருக்கும் இது தொடர்பில் முதலே கருத்தொற்றுமை மற்றும்...

வவுனியா மாவட்டத்தில் அரசுதரப்பு பெற்ற 2 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்று 2 சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவில் 16638 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 41225 வாக்குகளை தமிழரசுக்கட்சியும் பெற்றிருந்தன.வவுனியாவில் அரசுதரப்புக்கு வழங்கப்பட்ட...
வடமகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோகவெற்றியீட்டி 36 ஆசனங்களில் 28 இனை கைப்பற்றி மேலதிகமான 2 போனஸ் ஆசனங்களினையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1988 மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின்இலக்கம் 2 பிரிவு 62 இற்கமைவாக இங்கு கிடைத்துள்ள இந்த 2 போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு வழங்கவேண்டும் என கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணையாளருக்கு சிபார்சு செய்யப்படவேண்டும். இந்த போனஸ் ஆசன...

வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன்...

நடந்து முடிந்த தேர்தலில் ஆசனங்கள் முடிவாகியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கூட்டமைப்பில் தோல்வியடைய உள்ள அரசதரப்பில் வெற்றிபெறவுள்ள வேட்பாளர்கள் யார்? என்ற ஆவலில் ஆதரவாளர்கள் உள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் இதற்கான விடை தெரிந்துவிடும். கூட்டமைப்பு 30 இடங்களையும் அரசு 7 இடங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தினையும் பெற்றிரு்கின்றது. அதே நேரத்தில் அடுத்ததாக...

வடமாகாணசபை தேர்தல் 2013 இல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாணசபையினை கைப்பற்றி விட்டது.முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அடுத்த சிலதினங்களில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக வாக்குகளை பெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூடிய ஆசனங்களை பெற்றுள்ளது. இதுவரை முழுமையாக பெறுபேறுகள் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி முல்லைத்தீவில் அங்கு உள்ள 5 ஆசனங்களில் 4 இனையும்...
வவுனியா மாவட்டமும் மன்னார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வசமாகியது 11 ஆசனங்களில் 7 இனை கைப்பற்றியது. வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 2 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும். மன்னாரில் 5 ஆசனங்களில் 3 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 1 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 1 இனை முஸ்லிம் காங்கிரசும் பெற்றுக்கொண்டிருக்கின்றன....
கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மற்றும் வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி பதிவாகிய வாக்குகள் 68600, அளிக்கப்பட்ட வாக்குகள் 50194, செல்லுபடியான வாக்குகள் 45459, நிராகரிப்பு 4735, த.தே,கூ பெற்ற வாக்குகள் 37079, ஐ.ம.சு.மு 7897, ஐ.தே.க...
யாழ்ப்பாணத்தில் உள்ள 10 தொகுதிகளாகிய மானிப்பாய் ,வட்டுக்கோட்டை,உடுப்பிட்டி காங்கேசன்துறை,ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்,நல்லூர்,சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகியவற்றில் அவற்றினை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது..யாழ் மாவட்டத்தில் இந்த 10 தொகுதிகளுக்காகவும் 16 ஆசனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 ஆசனங்கைள கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டது.அரசின் இணைப்பு கட்சியான ஈ.பி.டி.பி யின் கோட்டையான ஊர்காவற்துறை தொகுதியினை மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிகொண்டிருப்பது முக்கிய விடயமாக...

நடந்து முடிந்த வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுகொண்டிருக்கின்ற நிலையில் வாக்குப்பெட்டியொன்றை சுற்றி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் விருப்பு இலக்கம் மற்றும் கட்சி சின்னத்துடன் கூடிய ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மூன்று மாகாணங்களிலும்...

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக குடாநாட்டு மக்கள் மிக உற்சாகமாக வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.வன்முறைகள் பெரியளவில் எதுவும் இதுவரை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம் முறை வாக்களிக்கும் நிலையங்களில் மக்கள் பெருமளவு கூடியுள்ளமை அவதானிக்க முடிந்தது. நிறைய வாக்காளர்களுக்கு இது தான் முதல் தேர்தலாக இருக்கிறது....

உரிமையா சலுகையா, வரலாற்று முடிவு இன்று தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம். என்ற தலைப்புடனேயே இன்றைய உதயன் நாளிதழ் வெளிவந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.என உதயன் பத்திரிகை நிர்வாகம் அறிவித்திருக்கிறது தேர்தல் தினமான இன்று உதயன் பத்திரிகையின் பிந்திய பதிப்பு என அச்சிடப்பட்டு விசமிகளால்...

All posts loaded
No more posts