அரசிலிருந்து கூண்டோடு வெளியேற தயாராகின்றனர் சு.க. அமைச்சர்கள்! – அனுமதியளிக்குமாறு மைத்திரியிடம் கோரிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசிலிருந்து கூண்டோடு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக ஜனாதிபதியிடம் அனுமதிபெறவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான யோசனை நேற்று மாலை ஜனாதிபதியிடம்...

மஹிந்தவிடம் நேரடி கேள்வி..! நீங்கள் தயாரா…?

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுடன், நேரடிபேஸ்புக் கேள்வி, பதிலுக்கு இன்றைய தினம், ஜூலை 23, 2015, காலை 8.30 முதல் இடம் பெறுகின்றது நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். Thank you everyone for all the questions and feedback. I saw so many good wishes as well - thank you for...
Ad Widget

இளைஞர் யுவதிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு – மஹிந்த

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது அரசாங்கத்தினால் ஆரம்பித்து இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த...

ஹக்கீமின் மஹியாவை அலுவலகம் மீது தாக்குதல்

கண்டி, கட்டுகஸ்தோட்டை மஹியாவை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த காரியாலயத்தின் பதாதைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை யாரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகபேச்சாளர் நிலையம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது. சம்பவம்...

உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன?

மாத்தறை - அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரோஹான் வெலிவிட தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தவறான விளக்கம் வழங்கப்படுவதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக...

அக்குரஸ்ஸவில் வெளிப்பட்டது மஹிந்தவின் உண்மை முகம்

மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அகுரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஆதரவாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் கையினைப் பிடிக்க முற்பட்ட போது,...

அந்த வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளுடையதே – கோட்டாபய ராஜபக்ஷ

மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...

வெள்ளைவானில் பிடிபட்ட மேஜர் ஜெனரலின் பாதுகாவலர்களுக்கு பிணை! – பின்னணி குறித்து சந்தேகம்.

மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த படையினர் மூவரும் நீதிமன்றினால் நேற்றுமாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு...

வௌ்ளை வேன் விவகாரம் – மஹிந்த, கோட்டாபயவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு பதிக்கப்பட்ட குறித்த வேனை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றியுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன்...

நீதியான – சுயாதீன தேர்தலை நடத்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்க! – ஜனாதிபதி உத்தரவு

நீதியானதும் - சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயகோனுக்கே இந்த ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார் என ஜனாதிபதி செயலக அலுவலகம்...

நான் துரோகி அல்ல குற்றச்சாட்டுக்களுக்கு மக்களே பதில் அளிப்பர்!

மக்கள் என்னுடன் இருக்கும் வரை எவருடைய குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளிக்கப் போவதில்லை. மக்கள் அதற்கு பதில் அளிப்பர் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

மீண்டும் சந்திரிக்கா!

திடீர் வௌிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (16) நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் தெரியவருகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய...

மஹிந்தவுக்கு தலைவர் பதவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் ஆரம்பமானது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 17ஆம் திகதி பார்ப்போம் – மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமானது. அக்கூட்டத்துக்கு வருகைதந்தபோது அங்கு குழுமியிந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய...

சுதந்திரக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தை ரத்துச்செய்ய மைத்திரி உத்தரவு – தொடங்கியது பனிப்போர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதையடுத்து, குழப்பமடைந்த, மகிந்த ராஜபக்ச தரப்பு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவைப் பயன்படுத்தி இன்று கட்சியின் மத்திய...

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். ”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது. இந்தச் சூழலில், இதுபற்றி...

ரயில் முன் பாய்ந்து மூவர் தற்கொலை

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு பெண் மற்றும் 01 வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் இவர்கள் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்...

கொழும்பில் சங்­கரி தலை­மை­யி­லான பட்­டி­யலில் ஜன­நா­யக கட்சி உறுப்­பினர் ஹிந்­தல்­பிட்­டிய

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை வர் வீ.ஆனந்­த­சங்­கரி தலை­மையில் கொழு ம்பு மாவட்­டத்தில் கள­மி­றங்­கி­யுள்ள வேட்­பாளர் பட்­டி­யலில் ஜன­நா­யகக் கட்­சியின் மேல்­மா­காண சபை உறுப்­பினர் சுசில் ஹிந்­தல்­பிட்­டி­யவும் இடம்­பி­டித்­துள்ளார். இந்தப் பட்­டி­யலில் கூட்­ட­ணியின் நிர்­வாகச் செய­லாளர் இரா.சங்­கையா, நாகேந்­திரன் தர்ஷன் ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர். கூட்­ட­ணியின் பட்­டி­யலில் உள்ள ஏனைய வேட்­பா­ளர்­களின் விபரம் வரு­மாறு வீர­சிங்கம் ஆனந்­த­சங்­கரி,...

தொலைபேசியில் வந்த செய்தியால் பதறிப்போய் தேர்தல் மேடையில் இருந்து இறங்கி ஓடிய மஹிந்த!

கடந்த காலங்களில் எதற்கும் அஞ்சாத தோரணையில் கம்பீரமாக தனது பிரதிமையை காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ராஜபக்‌ஷ தேர்தல் மேடையில் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. பிலியந்தலவில் கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் கைத்தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ஐக்கிய மக்கள்...

வேட்புமனு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts