Ad Widget

வரியற்ற வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களிலுள்ள அனைத்து வரியற்ற வர்த்தக நிலையங்களினதும் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார்.

duty-free-sri-lanka

அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘முன்னைய காலங்களில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது இவ்விரண்டு விமான நிலையங்களிலும் உள்ள வரியற்ற வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும், இதற்குரிய அதிகாரிகள் வரியற்ற வர்த்தக நிலையங்களை நடத்துவதற்கான, நடைமுறையிலுள்ள மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள கேள்விப்பத்திரத்துடன் தொடர்புகொள்ள முடியும்’ என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரியற்ற வர்த்தக நிலையங்கள் 56 உள்ளன. இதேவேளை மத்தல விமான நிலையத்தில் தனியொருவருக்கு மாத்திரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts