Ad Widget

மஹிந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய ரணில் தலைமையில் விசேட குழு!

நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ranil

இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.

இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவார் என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Related Posts