தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு – மனோ

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விவரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி தான் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் இந்த...

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?

மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...
Ad Widget

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் – முழு விபரம்

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர்கள் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர். அமைச்சுக்கள் மற்றும் செயலாளர்களின் விபரம் வருமாறு, 01.மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் - என்.ரூபசிங்க 02.கொள்கை திட்டமிடல், நிதித்துறை, சிறுவர்,இளைஞர் மற்றும் கலாசாரம் -...

கண்டி ஜனாதிபதி மாளிகையை பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம்

அரச தலைவர் கண்டிக்கு விஜயம் செய்யும் சந்தரப்பங்களில் பயன்படுத்தும் கண்டியிலுள்ள ஜனாதிபதி உத்தியோகபூவர் இல்லமான ஜனாதிபதி மாளிகையை மக்கள் பார்வையிடுவதற்கான சந்தரப்பம் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் பார்வைக்காக இந்த மாளிகையை திறந்துவிடுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பிலிமத்தலாவை நிலமேக்கு சொந்தமான வளவில், ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டதுடன் குறித்த வீடு “அரசமாளிகை”...

அலரிமாளிகை ‘போனிகளும்’ சிக்கின

அலரிமாளிகையில் இருந்ததாக கூறப்படும் போனி எனப்படும் சிறிய இன குதிரைகள் நான்கு, கோழிகள் மற்றும் ஒரு தொகுதி கோழிக்குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்துக்கு பொறுப்பாகவிருந்த நபரிடமிருந்தே மேற்குறிப்பிட்ட குதிரைகள், கோழிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை 80ஆயிரம் ரூபாவுக்கு தாம் பெற்றதாக பிலியந்தலையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பணியாற்றிய மாலபேயைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி அறிவிப்புகள்

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முடிவெடுத்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத்...

வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் வெளியேறாதாம்!

"நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் அகற்றப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்." - இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். நேற்று முன்தினம் கண்டிக்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன தலைமைப் பீடாதிபதியை சந்தித்து ஆசி வேண்டினார். இதன்போதே மேற்கண்ட...

சட்டவிரோதங்கள் அம்பலம்: பி.எம்.சி.எச் சில் இன்று விசேட தேடுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான சம்பவங்கள் அம்பலமாகிகொண்டிருக்கின்றன. தங்களுக்கு கிடைக்கின்ற இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டவிரோதமான பொருட்களை மீட்டுவருகின்றனர். சனிக்கிழமை (17) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை...

ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் மீட்பு

காலி துறைமுகத்தில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கப்பலில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் 12 இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை, எவான்ட்...

மஹிந்த, நாமல் உருவம் பொறிக்கப்பட்ட ஒருதொகை கடிகாரங்கள் மீட்பு

சபுகஸ்கந்தை - மாபிம பிரதேசத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மஹர நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, சபுகஸ்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை...

றக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலைக்கு சீல்

றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சிய சாலைக்கு பாதுகாப்பு அமைச்சினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள குறித்த களஞ்சியசாலையானது,...

திஸ்ஸ அத்தநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று அதிகாலை 01.00 மணியளவில் ஸ்ரீலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமான யூ.எல்.306 வகை விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் ஐ.தே.கட்சியிலிருந்து விலகி மகிந்த அரசுடன் இணைந்து 21 நாட்கள் சுகாதார அமைசாராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீன உதவியில் உருவாகும் கொழும்புத் துறைமுக நகரம் குறித்து மீளாய்வு!!

சீனாவின் உதவியுடன் கொழும்பில் உருவாக்கப்படும் துறைமுக நகரம் குறித்து இலங்கையின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக 'ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவில் அமைத்து வரும் இந்தத் துறைமுக நகரம் அமைக்கப்படுகின்றது. இதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் துறைமுக நகரத்தினால்...

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவார்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் நடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மனவடுவ தெரிவித்தார். அமைந்த புதிய அரசாங்கத்தில் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு உடன்பாடு ஏற்பட்டிருந்தது. எனினும் அது தோல்வியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது குறித்து...

மூடுவிழாவுக்கு தயாராகிறது மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம்!

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்‌ஷ விமான நிலையம் முன்னரே...

மஹிந்தவின் கொள்கலன்களுக்கு சீல்

ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள், பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து மீட்ட பொலிஸார், அவற்றுக்கு சீல் வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, தங்கொட்டுவையில் அமைந்துள்ள போசிலன்...

எதிர்க்கட்சி தலைவராக நிமல் நியமனம்

எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வட, கிழக்கின் பாதுகாப்பு நிலைமை; அறிக்கை கோரும் அமைச்சு

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர்...

நீதி விசாரணை கோரும் நாடுகடந்த இலங்கை ஊடகவியலாளர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, நாடுகடந்து வாழ்கின்ற ஊடகவியலாளர்கள் நாடுதிரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் மூலம் ஊடக சுதந்திரத்திற்கான வழிகள் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாடுதிரும்பத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான சுனந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். ஆனால், இலங்கையில்...

ஸ்ரீ. சு. கட்சியின் தலைவர் பதவி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஒற்றுமை நிலவவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பது தொடாபாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருட காலமாக மிகுந்த அர்பணிப்புடன் கட்சி தலைமை உட்பட பல பதவிகளை வகித்தவன் என்ற வகையிலும், கட்சியை வளர்த்தெடுத்தவன்...
Loading posts...

All posts loaded

No more posts