- Friday
- May 16th, 2025

தனது மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மகளிர் அரசியற்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிசி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக தனது மகள் போராட்டத்தில் இணைந்ததாகவும், இறுதிவரை...

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மின்னல் தாக்கி உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் சந்தியை அண்மித்த வேளை நடைபெற்றது. இதில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட் டாரத்தைச் சேர்ந்த நடராசா ரவி (வயது 50) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். இது...

வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணத்தில்...

யாழ் எய்ட்டின் முன்னால் போராளிகளுக்கு உதவும் செயற் திட்டத்தின் கீழ் இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் வாழ்வியலை கொண்டு நடாத்துவதற்கு சிரமப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த முன்னால் போராளிக்கு வவுனியாவில் வைத்து முன்னர் ஒரு தொகைப்பணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் நல்லின பசுமாடும் கன்றும் திருமலை மொரவெவவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது.அத்துடன் அங்கவீனமான முன்னால் போராளிகள்...

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியை பிரிகேடியர் வனசிங்க தலைமையிலான 682 ஆவது காலால் படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளதாக காணியை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கில் புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வீதிகளையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் ஏழே முக்கால்...

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம், கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த தகவலை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு...

கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 அளவில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டோ அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அந்தப் பகுதியிலுள்ள மூடியிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில்...

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட தலைவர் திரு ஸ்ரீஞானேஸ்வரன் திருமதி சிறீஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார பொறுப்பாளர் திரு அண்ணாத்துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். நேற்று காலை பரந்தன் சிவபுரத்தில் தமிழினி அவர்களது புகழுடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ்விலும் பங்குபற்றியிருந்தனர். இறுதி...

தமிழ் மக்களின் விடிவுக்காக சுமார் இரண்டு தசாப்தங்களாக போராடி இன்று மீளாத்துயிலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளராகவிருந்த தமிழினி அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அஞ்சலி செலுத்தினர். பரந்தன் சிவபுரத்தில் உள்ள தமிழினி அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் பூதவுடலுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த தமிழினியின் பூதவுடல் கிளிநொச்சி பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லபட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவை...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளன. அவரது உடலத்தைக் உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழலாம் என சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி - பரந்தனுக்குக் கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது...

கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகத்தினால் அனுப்பப்பட்ட நிதி தமிழ்த்...

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் மனிதவள இராஜதந்திர...

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளிளிற்கு ஆதரவாகவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஏ9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இன்று...

யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற போது நிகழ்வின் சிறப்பு...

வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது....

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...

காடழிப்பை ஜனாதிபதியால் கூட தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவு, கொத்தம்பியாகும்பம் என்ற இடத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

All posts loaded
No more posts