கிளிநொச்சி பெண் கொலை: கணவன் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கிளிநொச்சி வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த...

காணாமற்போனோரை மீட்டுத்தர மகிந்தவால் மட்டுமே முடியும்!

வடக்கு – கிழக்கில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால்தான் முடியும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும்...
Ad Widget

கிளிநொச்சியில் குடும்ப பெண் கொலை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் நேற்று (புதன்கிழமை) பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்ப பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் (வயது 24) கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் இடம்பெறும்கொண்டாட்ட நிகழ்வொன்றிற்கு அயலவர்கள்...

கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்க வேண்டாம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் நீண்ட...

தேர்தல் கடமையிலீடுபட்ட வாகனம் விபத்து : மூவர் படுகாயம்

முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம்!!

நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும்...

கேப்பாபுலவு மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய பொலிஸ் அதிகாரி!!

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் நேற்று (04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது.இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினம் இடம்பெற்ற நிலையில் சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் என தெரிவித்து தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு...

சுதந்திர தினத்தைப் புறக்கணித்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்றுடன் 350 நாட்களாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடி வருகிறார்கள். இதுவரை தமக்கான தீர்வுகள் எதுவும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார...

முல்லைத்தீவில் வாக்கு அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 288 வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

சிறுவனை தாக்கிய சம்பவம்: சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிணை

கிளிநொச்சியில் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும்...

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன்...

சிறைக்காவலர்கள் தாக்கிய சிறுவனுக்காக மனித உரிமை ஆணைக்குழு களத்தில்!

சிறுவன் ஒருவன் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவன், சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானான். சிறுவனின் தவறினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி, சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சிறுவனைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான சிறுவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின்...

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள்!!!!

நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில்...

ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை தீயிட்டு எரிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து...

கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததா கூட்டமைப்பு?

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில்...

கிளிநொச்சியில் பாலத்தின் கீழிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி, பன்னங்கண்டி பாலத்தின் கீழிருந்து ஆணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வட்டக்கச்சி மாயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பயணித்தவரே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு 98 ஆண்டுகள்: மக்கள் கொண்டாட்டம்

கிளிநொச்சி இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) பொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகளால் பொங்கல் பொங்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட...

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக மர நடுகை மூலம் இலங்கையில் சௌபாக்கியமான...

இரணைமடுச் சந்தியில் பாரவூர்தி விபத்து: சாரதி உயிரிழப்பு!

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். மாங்குளம் பகுதியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை யாழ் நோக்கிப் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. முன்னே சென்ற ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால்...
Loading posts...

All posts loaded

No more posts