Ad Widget

சிறைக்காவலர்கள் தாக்கிய சிறுவனுக்காக மனித உரிமை ஆணைக்குழு களத்தில்!

சிறுவன் ஒருவன் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவன், சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானான். சிறுவனின் தவறினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி, சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சிறுவனைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சிறுவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் நேற்று மதியம் வீடு திரும்பியுள்ளான்.

சம்பவம் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நேற்று(புதன்கிழமை) மாலை கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள சிறுவனின் இல்லத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts