Ad Widget

கிளிநொச்சி பெண் கொலை: கணவன் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கிளிநொச்சி வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த பெண் நேற்று நண்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண், விவாகரத்து பெறுவதற்காக நீண்ட காலமாக போராடி வந்ததாக அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதன் பின்னணியிலேயே இக்கொலை இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related Posts