காணமல்போன மீனவர்களை விமானம் மூலம் தேட நடவடிக்கை

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சிலாபத்தினை சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா,...

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களிற்கு இன்றுவரை தீர்வில்லை!

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களிற்கு இன்றுவரை எவ்வித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்திற்கு பின்னர் பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக்கப்பட்டுள்ளன. அதிலும் 41...
Ad Widget

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள்...

விபத்தில் வைத்தியர் ஒருவர் பலி

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்...

கிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை

அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் நேற்று முன்தினம்(06) இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(07) உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரியும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்திவரும் தொடர் போராட்டம் ஓராண்டு நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம்...

கிளிநொச்சியில் அதிக பனிமூட்டம்

வழமைக்கு மாறாக இன்று கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது. காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். சில...

பாடசாலைச் சிறுவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்றிற்குள் ஓட்டை!

கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....

புகையிரத கடவையில் விபத்து; ஒருவர் பலி

கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (05) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டர் சைக்கிளில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட நபர் மீது புகையிரதம் மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். பரந்தன் புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர்...

‘மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வேண்டாம்’ : வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலையை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு இளைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதப்படுகொலையை கண்டித்தும், இவ்விடயத்தில் ஐ.நா. தலையிட்டு உடனடி தீர்வு வழங்க வேண்டுமென கோரியும், கடந்த 2009ஆம்...

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் : இரா.சம்பந்தன்

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன், எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கேப்பாப்புலவு காணிகளை...

பொலிஸாரின் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுடன் (01.03.2018) ஒருவருடம் ஆனதையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது அதிகளவான பொலிஸார் நேற்று காலைமுதல் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு...

வட. மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலை கிளிநொச்சியில்!

வடக்கு மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலையை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கும் நோக்கில் நிதி வழங்குனர்களுடன் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 4.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள விசேட...

முள்ளிவாய்க்காலை சுவீகரிக்க வந்தவர்கள் மக்களால் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால்...

அம்பாள்புரம் மாணவர்களுக்கு புதிய பேரூந்து சேவை!

முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில்...

இரணைமடுவில் வேறு இடத்திற்கு நகர்த்தப்பட உள்ள அரச மரம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் காணப்பட்ட அரச மரம் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படையினரால் பாரிய குழியினை ஏற்படுத்தி, அரச மரம் பாதிக்கப்படாத வகையில் அதனை நகர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் இந்த அரச மரம் வேறொரு இடத்தில் வைக்கப்படலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்....

முல்லைத்தீவில் வயற்காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு – நித்தகைக்குளத்தையும் அதனோடு இணைந்த வயற்காணிகளையும் விடுவித்துத் தருவதுடன், வயற்காணிகளுக்கு செல்வதற்கான வீதியினையும் மறுசீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக தெரியவருகையில், நித்தகைக்குள விடுவிப்பு மற்றும் வீதி மறுசீரமைப்பு போன்றவை தொடர்பான கோரிக்கையொன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் குமுழமுனை கிழக்கினுடைய கமக்கார அமைப்பினரின் அழைப்பை ஏற்ற...

முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொது நோக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் இறுதி யுத்தத்தின் பின்னர் பல வாழ்வாதார நெருக்கடிகளை...

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேசத்தின் போக்குவரத்து பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வு

ஆங்கிலப் பத்திரிகையொன்றில்நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியிருந்த, “போக்குவரத்து வசதி இல்லாமையினால் நாள்தோறும் 24 கி.மீ. தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்” எனும் செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டது. இதனால் அவருடைய ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவினது தலையீட்டின் காரணமாக அந்த மாணவர்களினதும்...

இராணுவ வாகனம் விபத்து : நால்வர் படுகாயம்!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இராணுவ வாகனத்துடன், வான் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றி வந்த வான், ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, வேகமாக வந்த இராணுவ வாகனம்...
Loading posts...

All posts loaded

No more posts