Ad Widget

பணத்திற்கு காணியை வழங்காவிட்டால் இரண்டையும் இழக்கும் நிலை உருவாகும்: கடற்படை!

அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இம்முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது அம்மக்களுக்கு பணத்தாசை காட்டி காணியைக் கைப்பற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி, அண்மையில் மன்னார் – வங்காலைக் கிராமத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த 5...

மீள்குடியேற்றத்தை தாமதித்தால் போராட்டம் செய்வோம்;வலி வடக்கு மக்கள்

கொஸ்கம சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிவழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 27 வருடங்களாக சொந்த இடத்தில் தங்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயத்தில் மாற்றான் மனப்பான்மையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச மீள் குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி,...
Ad Widget

பேரீத்தம் பழம் வழங்கலில் குழறுபடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

சவூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட பேரீத்தம் பழம் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு இன்னும் வழங்கப் படவில்லை என யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் அங்கம் வகிக்கும் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது . இவ் விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொகைதீன்...

ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது பாதைகள் திறக்கப்படுமா ?

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண...

அங்கசேஷ்ட்டை புரிபவர்களால் மாணவிகள் அவதி

வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்....

நாவற்குழியில் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்!

சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு...

பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடிகள் அதிகரிப்பு!! கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி...

சாவகச்சேரியில் வீட்டுத்திட்டத்தைப் பெறுவதில் சிரமம்

சாவகச்சேரி பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள், தற்போது வசிக்கும் வீட்டின் முன்னால் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை வழங்குமாறு பிரதேச செயலகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,வீட்டுத்திட்டப் பணிகளுக்கான பணத்தை வைப்பிலிடுவதற்காக பயனாளிகளின் தேசிய சேமிப்பு வங்கி கணக்கு இலக்கம் போன்றனவற்றை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்....

வெள்ளம் வெளியேற யாழ் .சிறைச்சாலை கட்டடம் இடைஞ்சல்

கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால், ஜே - 80 கிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் போது நீர் பாய்ந்து செல்லக்கூடிய மதகு மற்றும் கால்வாய் என்பவற்றை மூடி யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளமையால், தங்கள் கிராமத்தில் தேங்கிய வெள்ளம் பாய்ந்தோட முடியாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்....

தாகத்தால் தவிக்கும் பூநகரி மக்கள்!

கிளிநொச்சி-பூநகரிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த நிலையைப் போக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பூநகரி கமக்கார அமைப்பின் தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட ஞானிமடம், நல்லூர், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி,...

தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணம் அறவிடுதாக குற்றச்சாட்டு

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் என்பன VAT வரியினை சாட்டிக் கொண்டு நோயாளிகளிடம் கூடுதலான பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு ஒன்று மக்களிடையே எழுந்துள்ளது. VAT வரி திருத்தத்திற்குள் மறைந்துகொண்டு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களில், நோயாளர்களிடம் அதிக பணம் அறவிடப்படுவதாக இலங்கை வைத்திய இரசாயனகூட ஆய்வுகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 15 வீதத்தால்...

அடிப்படை வசதிகளற்ற நிலையில் அறுகுவெளி மக்கள்

தென்மராட்சியின் தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள சுமார் 20 குடும்பங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். போர் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்து பல இடங்களில் இடம்பெயர்ந்திருந்து, தற்போது தங்களுடைய சொந்த இடத்துக்கு மீளக்குடியேறியுள்ளனர். ஆனால், அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர். இக் கிராமத்துக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்தக்...

அடிப்படை வசதிகளற்ற நிலையில் 15 குடும்பங்கள் மீள்குடியமர்வு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர். பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்....

பூநகரி பிரதேச மருத்துவமனையில் நீர்ப்பற்றாக்குறையினால் நோயாளர்கள் அவதி!!

பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நோயாளர்கள் நாளாந்தம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...

வடமாகாண சபையின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி எங்கே?

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில், வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டபோதும் அங்கே இன்னமும் நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படும் என கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில்...

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் திருநெல்வேலி பொதுச் சந்தை

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபாரிகளுக்கான நீர் விநியோகம் சீராக இடம்பெறாமை, மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை , சந்தையிலுள்ள மலசலகூடங்கள் சுத்தமற்றுக் காணப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வியாபாரிகள் தமது இட வாடகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04-05-2016) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்....

யாழில் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் மக்கள்!

தினமும் மாலை ஆறு மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ- ? யார் வந்து வெட்டுவார்களோ? என்ற அச்சத்தில் வாழ்வதைவிட இந்த ஊரை விட்டு வெளியேறுவதே சரியான முடிவாகும் என யாழ். வாசி ஒருவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார். இதேவேளை, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்...

கவனிப்பற்று காணப்படும் யாழ். மணிக்கூட்டு கோபுரம்

யாழ்பாணத்திலுள்ள மணிக்கூட்டு கோபுரம், கடந்த பல வருடங்களாக கவனிப்பார் அற்று இருக்கும் நிலையில், மாலை 4 மணி, 7 மணியாக அடையாளப்படுத்தப்படுவதுடன் அனைத்து நேரங்களுக்குமான ஒலிகள் மாறுபட்டே எழுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் அடையாள சின்னங்களில் இம் மணிக்கூட்டு கோபுரமும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அடையாளச் சின்னங்களை பாதுகாக்க வேண்டி அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக...

தாண்டிக்குளம் விவசாயபண்ணையை தாரை வார்த்தது வடக்கு மாகாணசபை!!

வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...

யாழ்.மாவட்ட செயலக பாதுகாப்பு அதிகாரியின் அடாவடி!!

யாழ்.மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நிர்வாகமா அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகமா நடைபெற்று வருகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்பவர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்கின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட்...
Loading posts...

All posts loaded

No more posts