விஸ்வரூபம் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும்: இலங்கையிலும் விரைவில்!

'விஸ்வரூபம்'பெப்ரவரி 7ஆம் தேதி (வியாக்கிழமை) வெளியாகிறது. இதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு மான்புமிகு முதலமைச்சர்க்கு நன்றி. (more…)

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை

சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த...
Ad Widget

“திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது.-மகிந்த

நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலையில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)

கெஞ்சியபோதும் கண் முன்பாகவே வீடுகளை இடித்து அழித்தனர் படையினர்!

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர். (more…)

2ம் வகை நீரிழிவு நோய்க்கான மருந்து தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு!

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும்

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்ள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேருகளை நாளை வியாழக்கிழமை...

‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு மீண்டும் நீதிமன்றம் தடை

உலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது. (more…)

அரசியல் விளையாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்டனர்: கமல்

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)

விஸ்வரூபம் மீதான தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படம் தீர்ப்பு மீண்டும் நேற்றிரவு 10 மணிக்கு அறிவிக்கப்படுவதாக இருந்த போதிலும் 10.20 மணிக்கே தீர்ப்பளிக்கப்பட்டது. (more…)

கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்!

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

திருமணப்பதிவு வரியிலிருந்து விலக்களிக்கவும்: ஆதிவாசிகளின் தலைவர்

திருமணப்பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் வரி அறவீட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோ அந்த வரியை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது எனவும் கோரியுள்ளார்.பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சகல வரிகளில் இருந்தும் ஆதிவாசிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரியையும் தங்களிடமிருந்து அறவிடக்கூடாது என்றும் கோரியுள்ளார். (more…)

இன்று 313 முன்னாள் புலி உறுப்பினர் சமூகத்துடன் இணைப்பு

யுத்தத்தின் போது சரணரடந்த கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 313 பேர் இன்யய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றிலேயே இவர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். (more…)

கிளிநொச்சி சம்பவம்! அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்!- சிறிதரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். (more…)

குடாநாட்டுக்குள் நுழையும் வாகனங்கள் நாளை முதல் நிறைச் சோதனை அவசியம்!

யாழ். குடாநாட்டுக்குள் பொருள்களுடன் நுழையும் வாகனங்கள் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் நிறை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.அதனடிப்படையில் ஒவ்வொரு வகை வாகனங்களிலும் அவற்றின் கொள்ளவுக்கு ஏற்ப பொருள்களின் நிறை ஏற்றப்பட வேண்டும் என புதிய கட்டுப்பாடு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)

பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்ல வேண்டும் என உத்தரவு!

சுதந்திர பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 12.1.2013 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.அம்மாநாட்டுக்கு அண்மையில் நியமனம்பெற்ற சகல பட்டதாரிகளும் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமது செலவில் சென்று வரவேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். (more…)

ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. (more…)

நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் – ஜனாதிபதி

நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (more…)

அரச மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்ற தடை!

அரசாங்க மருத்துவ நிர்வாக சேவையில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதைத் தடை செய்யப்படும் இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts