கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கும் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

யாழ்.தாக்குதல் சம்பவத்திற்கும் யாழ். படைத்தளபதிக்கும் தொடர்பு!- ரணில்

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
Ad Widget

காதலர் தினம் யாருக்கு?

இன்று காதலர் தினம் என்று பலர் மயக்கத்தில் அலைவார்கள்.உண்மையில் இது காதலிப்போர் தினம் அல்ல.அன்பை கொண்டாடுவோர் அல்லது நேசிக்கும் மனதினருக்கான ஒரு நாள்.என்ன வகையான் தினம் என்றாலும் அது மேலை நாட்டில் இருந்துதான் நமக்கு இறக்குமதி யாகிறது.இந்த தினங்களில் குறிப்பிட்ட விடயத்தை விட வியாபர நோக்கங்களே அடிப்படை அமைப்பாக விருப்பமாக கொண்டுள்ளது.அதற்காகவே ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படவும்...

ரயில் உயர் பாதுகாப்பு வலய வேலியை பிய்த்துக் கொண்டு செல்லும்! -மகிந்த பதிலடி!

அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறை, நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. (more…)

இலங்கையில் விஸ்வரூபத்திற்கான தற்காலிக தடை நீக்கப்பட்டது:

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னரே அதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

”கங்ணம் ஸ்ரைல்” நடனம் வெளிவந்து உலகெங்கும் பிரபல்யமாகியிருக்கும் இத்தருணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உலகத்தலைவர்களை கிண்டல்செய்யும் வகையில் You tube இல் கணினி பல்லூடக வடிவமைப்பாளர்களால் காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன . உங்களுக்காக சில வற்றினை இங்கே நகைச்சுவைக்காக தருகின்றோம் அமெரிக்க ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம் இலங்கை ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம்...

புலிகளின் நிர்வாகம் சிறந்தது என கூறும் நிலை வரக்கூடாது- ஆனந்தசங்கரி

மேலும் 1400 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் கைது செய்யபட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன்.இக்கூற்றில் எதுவித உண்மையிருப்பின் இதுவரை தாம் கைது செய்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்பதையும், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும், முகாம்களிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை போன்ற சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை தரமுடியுமா? முடியாத பட்சத்தில் இக்கூற்று...

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் நடாத்தப்படும் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

தமிழ் மாணவர்களின் விஞ்ஞான அறிவி;னை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் கடந்த காலங்களில் நடாத்திவந்தது போன்று இவ்வருடமும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையேயான விஞ்ஞானப் போட்டி நிகழ்ச்சிகளை “சமூக வலுவூட்டலுக்கான கல்வி” என்ற கருப்பொருளுக்கு அமைய நடாத்தத் தீர்மானித்துள்ளது .இப்போட்டிகள் பெப்பரவரி 8ம் திகதி தொடக்கம் மார்ச் 4ம் திகதி வரை நடைபெறும் என உதவிப் பொதுச்...

விஸ்வரூபம் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும்: இலங்கையிலும் விரைவில்!

'விஸ்வரூபம்'பெப்ரவரி 7ஆம் தேதி (வியாக்கிழமை) வெளியாகிறது. இதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு மான்புமிகு முதலமைச்சர்க்கு நன்றி. (more…)

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை

சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த...

“திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது.-மகிந்த

நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலையில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)

கெஞ்சியபோதும் கண் முன்பாகவே வீடுகளை இடித்து அழித்தனர் படையினர்!

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர். (more…)

2ம் வகை நீரிழிவு நோய்க்கான மருந்து தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு!

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும்

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்ள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேருகளை நாளை வியாழக்கிழமை...

‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு மீண்டும் நீதிமன்றம் தடை

உலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது. (more…)

அரசியல் விளையாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்டனர்: கமல்

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)

விஸ்வரூபம் மீதான தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படம் தீர்ப்பு மீண்டும் நேற்றிரவு 10 மணிக்கு அறிவிக்கப்படுவதாக இருந்த போதிலும் 10.20 மணிக்கே தீர்ப்பளிக்கப்பட்டது. (more…)

கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்!

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

திருமணப்பதிவு வரியிலிருந்து விலக்களிக்கவும்: ஆதிவாசிகளின் தலைவர்

திருமணப்பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் வரி அறவீட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோ அந்த வரியை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது எனவும் கோரியுள்ளார்.பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சகல வரிகளில் இருந்தும் ஆதிவாசிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரியையும் தங்களிடமிருந்து அறவிடக்கூடாது என்றும் கோரியுள்ளார். (more…)

இன்று 313 முன்னாள் புலி உறுப்பினர் சமூகத்துடன் இணைப்பு

யுத்தத்தின் போது சரணரடந்த கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 313 பேர் இன்யய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றிலேயே இவர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts