காணிப் பதிவுக்கான கட்டணத்தில் மாற்றம்

காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கான புதிய கட்டணத் திருத்தம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.காணி உறுதிப்பத்திர பிரதிகளை பெற்றுக்கொள்ளவதற்கான கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர தெரிவித்துள்ளார். (more…)

கல்விச் செயற்பாடுகளைஆரம்பிக்க ஒத்துழைக்காவிடில் பதவி விலகுவேன் – துணைவேந்தர் எச்சரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளிடம் கூறியதாக தெரியவருகின்றது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள். (more…)
Ad Widget

டக்ளஸ் தேவானந்தா தலையீட்டால் சிங்கள மொழி கற்பித்தல் பிரச்சினைக்குத் தீர்வு!- மு.சந்திரகுமார்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்றுவிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ்...

நல்லூர் ஆலயத்தில் காவலரன் அமைக்க ஆலய நிர்வாகிகளே கேட்டனராம்!

நல்லூர் ஆலயச் சுற்றாடலில் படையினரால் காவலரண் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள், இராணுவத்தின் மீது சுமத்தி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு அடிப்படையான காரணகர்த்த நல்லூர் ஆலய நிர்வாகிகளே என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இவர்கள் படையினரை சந்தித்து தமது ஆலயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, படையினர் காவலரண்...

நல்லூர் பிரதேச சபை வரிகளை அதிகரித்தது!

நல்லூர் பிரதேச சபை தனது ஆட்சியின் கீழ் வரும் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் நிலையங்கள் நிறுவனங்களுக்கான வருடாந்த வரியினை இவ்வருடம் அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த காலங்களில் 800 ரூபா அளவில் இருந்த வரிகள் கூட இம்முறை 3500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகரிப்பு வீதமானது மிகவும் அதிகமானதாக காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் மட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமல்போன மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி காரைநகரில் சடலமாக மீட்பு!

சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் இன்று காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம்...

மருத்துவர் சிவசங்கர் விடயத்தில் மருத்துவர் சங்கம் மௌனமா?

அநுராதபுர இரத்தவங்கியில் கடமையாற்றும் வைத்தியரும் உதயன் நாளிதழின் பத்தி எழுத்தாளருமான வைத்தியர் இரத்னசிங்கம் சிவசங்கர் கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்..கிளிநொச்சியில் புதிதாக இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்த பெண்களின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (more…)

மூளாய் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் சாவு

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் மூளாய் மேற்கு சுழிபுரத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராசா வைகுந்தகுமார் (வயது30) என்ற இளைஞர் உயிரிழந்தார்.வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதியுள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால் மூடப்படும்!- உயர்கல்வி அமைச்சர் எச்சரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (more…)

வட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

எரிவாயு விலை நள்ளிரவுமுதல் அதிகரிப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 150 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. (more…)

இரட்டைக் குடியுரிமை; இனிமேல் புதிய நடைமுறை கோத்தபாய அறிவிப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க, இந்த ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார். (more…)

வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். (more…)

22 இணைய தளங்கள் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன

இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன.வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன. (more…)

தனது கணவரை வங்கியின் தலைவராக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தார்: அமைச்சர் திஸ்ஸ விதாரண

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். (more…)

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை: மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)

கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை – கொதிக்கும் கமல்

சினிமாத்துறையில் எப்போதுமே புதிய முயற்சிகளையும், புதிய விஞ்ஞான வளர்ச்சிகளையும் வரவேற்று ஆதரிப்பவர் கமல்ஹாசன். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விஸ்வரூபம் AURO 3D என்ற புதிய ஒலியமைப்பில் உருவாகிவருகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் சேவை மூலம் ஒளிபரப்ப முயற்சி நடக்கிறது. படம் வெளியாகும் அதே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். (more…)

சம்பந்தர், ஹேரத் நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜர்

இலங்கையின் தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பில், நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர். (more…)

மாணவர் விடுதலை வலியுறுத்தி – தேசிய மாணவர் இயக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தேசிய மாணவர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துண்டுப் பிரசுர விநியோக நடவடிக்கையொன்று கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)

மன்னிக்க வேண்டுகிறேன்…..

அன்புள்ள…..உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts