Ad Widget

வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 1570 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரச வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 1570 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...

ஊதுவர்த்தி பாவனை குறித்து எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு

"சந்தையில் உள்ள ஊதுவர்த்திகள் ஒரு தீவிர நச்சு புற்றுநோயாகும்" என சுகாதார அமைச்சின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர்.இனோகா சுரவீரா எச்சரித்துள்ளார்.. இலங்கையில் ஊதுவர்த்திகளின் உடல்நல பாதிப்புகள் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை ஆனால், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஊதுவர்த்திகளில் பலவிதமான நச்சு இரசாயனங்கள் உள்ளன, அவற்றில் கொந்தளிப்பான...
Ad Widget

இலங்கை மின்சார சபை மின் விளக்குகளை பராமரிப்பதில் அதில் திருத்தங்கள் செய்வதில் இன்னமும் மேன்மை அடையவில்லை.- மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன் குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபை பல விடயங்களில் மேன்மை அடைந்து விட்டது ஆனால் அதன் பராமரிப்பில் உள்ள வீதி மின் விளக்குகளை பராமரிப்பதில் அதில் திருத்தங்கள் செய்வதில் இன்னமும் மேன்மை அடையவில்லை. அசமந்த போக்கே தொடர்கின்றது. என யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் குற்றம்சாட்டியுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.மாநகர சபையின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார உறுப்பினர்கள்...

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது!

சந்திராயன் -2  இன்று விண்ணில் ஏவப்பட்டது! இதன் சிறப்புகள் பல அவற்றுள் முக்கியமானது இந்தச் செயற்கைக் கோளின் முழு ஆணைகளும் (Commands) ரிது, வனிதா என்ற இரு பெண்களால் நிர்வகிக்கப்படும். இந்தத் திட்டத்தின் இயக்குநரே (Mission Director) ஒரு பெண்தான். ரிது செவ்வாய்க்கு இந்தியா விண்கலம் அனுப்பியதில் (மங்கல்யான்) முக்கியப் பங்காற்றியவர். வனிதா விருது பெற்ற...

கன்னியா வெந்நீர் ஊற்று சர்ச்சை; பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை அமைக்க நீதிமன்றம் தடை

திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் விவகாரம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா, வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோகில ரமணி எனும் பெண் எழுத்தானை விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர், கொழும்பு...

மட்டு. மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணிபணிமனையை செயலாளர் நாயகம்சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்!

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல.57/1, சோமசுந்தரம் சதுக்கம், மாமாங்கம், மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ளதமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மட்டக்களப்புமாவட்ட பணிமனை இன்று திங்கட் கிழமைநண்பகல் 12.30 மணியளவில் செயலாளர்நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால்வைபவ ரீதியாக திறந்து வைத்து மாவட்டபணிமனை பெயர் பலகையையும்திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாக இணைஉப செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டஅமைப்பாளருமான எஸ்.சோமசுந்தரம், பொருளாளரும் பொருளாதாரவிவகாரங்களுக்கான உப செயலாளருமானபேராசிரியர் வி.பி.சிவநாதன், நிர்வாக இணைஉப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகாரங்களுக்கான உப செயலாளர் திருமதிரூபா சுரேந்திரன், மகளிர் அணி உப செயலாளர்திருமதி இளவேந்தி நிர்மலராஜ், ஊடகம் மற்றும்செயற்றிட்ட ஆக்கங்களுக்கான உப செயலாளர்த.சிற்பரன், தொகுதி அமைப்பாளர்இரா.மயூதரன், இளைஞர் அணி அமைப்பாளர்கே.கிருஸ்ணமீனன், வவுனியா மாவட்டஅமைப்பாளர் செ.சிறீதரன், கிளிநொச்சிமாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடகஉதவியாளர் சதீஸ் ஆகியோர்பங்கேற்றிருந்தார்கள். மட்டு. மாவட்ட பணிமனைக்கு அண்மையாகஅமர்ந்திருந்து அருளாசிகளைவழங்கிக்கொண்டிருக்கும் மாமாங்கேசுவரப்பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்றதிருவிழாவிற்கு சென்று வழிபாட்டினைமேற்கொண்டதன் பின்னர் மாவட்டபணிமனையை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாமாங்கம் பகுதிமக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

ஆயுள் தண்டனைக் கைதியான சரவணபவன் உரிமையாளர் மரணம்!

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத் திருமணம் செய்தால் மேலும் வளர்ச்சியடையலாம் என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்ய முற்பட்டார் ராஜகோபால். இந்நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார்...

ஆணையாளர் கையெழுத்திடாத ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தம் வலிதற்றது! அவை சிமாட்போல்களே அல்ல – வரதராஜன் பார்த்திபன்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர், வரதராஜன் பார்த்திபன்  நேற்றைய(18.07.2019)  மாநகரசபை அமர்வில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 6 அதிகார சபைகளில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதற்கு அப்பால் பல முரண்பாடுகள் அதில் காணப்படுகின்றன வைகாசி மாதம் இடம் பெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் கம்பத்தில்...

கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்தம்.

இன்று காலை 11.30 மணி முதல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் எம்பிக்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்  நடைபெற்ற கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை...

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழ் மாநகரசபை அமர்வு! (Live Video)

https://www.facebook.com/VishnuTNPF/videos/773120919752637/ https://www.facebook.com/VishnuTNPF/videos/445845889302341

முறையற்ற 5G திறன் கம்பங்களுக்கு எதிராக மாநகரசபையில் போராட்டம்

வெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  18.07.2019 வியாழன் காலை 09 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில்  யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஏற்பாடு செய்திருந்தது யாழ் மாநகரசபை முன்பாக இடம்பெறும் எதிர்ப்பு போராட்டத்தில்  மக்கள் கலந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.   மாநகரசபை...

பலாலி விமான நிலைய வேலைவாய்ப்புக்கள் – விண்ணப்ப முடிவுத்திகதி 26.7.2019

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான  பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான முடிவுத்திகதி 26.07.2019  ஆகும் விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம் விண்ணப்ப மாதிரிகள்  https://airport.lk/aasl/reach_us/careers.php

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில்

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் (Northern Province Round Table) இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ...

கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம்...

செம்மலையில் ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்!

செம்மலை பழையநீராவியடி பிள்ளையார் கோயிலில் நந்தி கொடிகளை அறுத்தெறிந்து குருகந்த ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில்...

எமது பாதுகாப்பிற்கு நாம் ஆயுதம் தூக்கவும் தயார் என இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்- சித்தார்த்தன் எம்பி

எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125...

பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கவே விரும்புகின்றனர்.

“இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது. எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று...

நாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான...

அமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு

அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறுவதில் எவ்வித உண்மைகளுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சுப்...

சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல்முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்பத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக...
Loading posts...

All posts loaded

No more posts