Ad Widget

கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமான ஆவணைங்களை சுமந்திரன் வெளியிட்டார்

கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமாக பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதால்  இது தொடர்பிலான ஆவணங்களை வெளிப்படுத்துகிறேன் என்று கூறி  சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் சில ஆவணங்களை  வெளியிட்டிருக்கிறார். ஜூலை 10, 11 ஆம் திகதியிடப்பட்ட கடிதங்கள் முறையே நிதி அதிகாரம் வழங்குவதும், கணக்காளருக்கான ஆளனி அனுமதியுமாகும் என அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிஉயர் வேகத் தொலைத்தொடர்புக் கம்பங்களை மின்விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது-பொ.ஐங்கரநேசன் காட்டம்!

செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத்...
Ad Widget

போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

"போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது" எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், "அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு...

எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு  சனிக்கிழமை (06.07.2019) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியத் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு பொ.ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கு...

பிரபாகரன் தான் முடிசூட விரும்பவில்லை; தமிழ் முடிசூடவே விரும்பினார்

தமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது. இவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று...

பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாகியது

பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில்  ஒன்றுகூடினர். பழைய மாணவர் சங்கங்களின்...

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டையும் உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது முதலாவது தேசிய மாநாட்டை நாளை 06.07.2019(சனிக்கிழமை) அன்று நடாத்துகிறது. இம்மாநாடு அன்றைய தினம் மாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணிவரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...

பலாலியில் இருந்து முதல் விமானம் அடுத்தமாதம் இந்தியாவுக்கு புறப்படும்!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக...

யாழில் நடந்த துப்பாக்கிச் சூடு வாள்வெட்டுக்குழு உறுப்பினர் பலி

யாழ். மானிப்பாயில் ஆவாக் குழு உறுப்­பினர் எனக் கூறப்­படும் இளைஞரொருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணை­களில் பல புதிய தக­வல்கள் அம்பலமாகியுள்ளன. ஆவா குழுவிலிருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின் தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் குறித்த நபர்கள் வந்­துள்­ள­தாக...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent Authority) வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய துணைவேந்தர் தெரிவுசெய்யப்படும் வரை இவரது நியமனம் செயலில் இருக்கும்.துணைவேந்தர்கள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான நியமனம் வழங்கப்படுவது வழமை.  இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கைது; அடுத்த கட்ட நடவடிக்கையில் சுமந்திரன்

யாழ்.பல்கலைக்கழக வளாககத்துக்குள் இராணுவத்தினர் இன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிரு;தனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தங்கியிருந்த விடுதிகளில் தமிழீழத்தின் வரைபடம் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு...

முதலாவது வடமாகாண வட்ட மேசை கலந்துரையாடல்

"வடக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி" என்ற தலைப்பில் ஆளுனரின் வட்டமேசை மாநாடு யாழ் பொது நுாலகத்தில் இன்று(4) இடம்பெற்றது வடக்கு மாகாண மத்தியவங்கி முகாமையாளர் சிவதீபன் , சிரேஸ்ர விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் , ஆளுனர் சுரேன் இராகவன் , மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி திரு. செல்வின் ஆகியோர் உட்பட பலதரப்பினர் பங்கேற்றிருந்தனர்...

NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது

வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) அனைவரும் பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது. அது தொடர்பில் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நீங்கள் புதிய தொழில்முயற்சி ஒன்றை ஆரம்பிக்க விரும்புகின்றீர்கள் அல்லது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றீர்கள் இந்நிலையில் உங்களுக்கு ஒரு அலுவலகம் தேவை அதற்காக முதலீடு...

இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சிறப்பு அறிக்கை

அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பாராளுமன்றில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான சிறப்பு நிபுணர் குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதங்கள் தொடர்கின்றன. இடைக்கால அறிக்கை, ஆறு உபகுழு அறிக்கைகள், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பை ஆராய்வதற்காக வழிப்படுத்தும் குழுவினால் உருவாக்கப்பட்ட நிமித்த உபகுழு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிப்படுத்தும் குழுவிற்காக...

கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்க விழிப்புணர்வு அறிவித்தல்

புதிய மாணவர் அனுமதி தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம் இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான...

புலிகளின் போர்க்குற்றங்களை சமர்ப்பிக்க தயார் சுமந்திரன் பாராளுமன்றில் பேச்சு

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) பாராளுமன்றில் தெரிவித்தார் இராணுவம் மற்றும் புலிகள் இருதரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர் என சர்வதேச அறிக்கையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்த அவர் இதைத்தெரிவிப்பதற்காக என்சார்ந்த சமூகம் என்னை கடுமையாக சாடும் ஆனால் எல்லாத்தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தன என்பதே உண்மை...

ஒழுக்கமற்ற அரசியல் செயற்பாடுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டதாலேயே நீக்கினேன் – மைத்திரி

சனாதிபதி இன்று நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரை வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய...

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் நிலைப்பாடு அறிவிக்கும் கூட்டம் ஒக்டோபர் 24ம் திகதி நடைபெறவுள்ளது

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் உன்றுக்கு  தமிழ்மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் பேரவை  வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை...

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபைஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் மகஜர் கையளிக்கப்பட்டது    கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக ...

Coit Tower, Alcatraz and Part of San Francisco Bay

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
Loading posts...

All posts loaded

No more posts