தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நாளை காலை 9 மணிக்கு ஆஐராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.கடந்த 31ம் திகதி சாவகச்சேரி நகரில் மேற்படி கட்சியினர் பிரசாரத்திலீடுபட்டிருந்த நிலையில் தேர்தல் சட்டத்திற்கு மாறாக பிரசாரத்திலீடுபட்டதாக கூறி கட்சியின் வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின்...

தேர்தலில் சுமந்திரன் போன்றவர்களை நிராகரிக்கவேண்டும் அனந்தி கோரிக்கை

சர்வதேசஅரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம்கட்டும் பொறுப்புவாக்காளர்களாகிய உங்களுக்குஉண்டுஎன்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி. என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடக அறிக்கை மூலம் கோரியுள்ளார் அவரது அறிக்கையின் முழு வடிவம் 2013 வடமாகாண மக்கள் என்னை மாகாணசபைக்கு அமோகமான வாக்குகள் மூலம் தெரிந்தெடுத்தார்கள்....
Ad Widget

சர்வதேச விசாரணையெனில் முன்னிலையாக தயார்! ஜனநாயகப்போராளிகள் அமைப்பு அறிவிப்பு!

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை ஜநா முன்னெடுக்குமானால் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க தாம் விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக ஜனநாயகப்போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தினில் இன்று இடம்பெற்ற அவ்வமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அதன் ஊடகப்பிரிவினர் இனப்படுகொலைக்கான  விசாரணை அறிக்கையினில் விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன....

தலைவனாக இருப்பதை விட தொண்டனாக இருப்பதையே விரும்புகின்றேன் – டர்ஷன்

வருமானத்துக்காக இனமானதையும் தன் மானத்தையும் விற்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி ஒரு போதும் தயாராக இல்லை என்பதை இந்த வேளையில் தெரிய படுத்தி கொள்கின்றேன் என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்றதன் பின்னர் தேசிய பட்டியலில்...

இது முடிவு செய்ய வேண்டிய நேரம். நாங்கள் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இருக்கின்றோம்.-கோகிலவாணி

த.தே.ம.முன்னணி வேட்பாளர் கோகிலவாணி விஞ்ஞாபன நிகழ்வில் ஆற்றிய உரையில் இது முடிவு செய்ய வேண்டிய நேரம். நாங்கள் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இருக்கின்றோம் என தெரிவித்தார் அவரது உரை முழுமையாக.... பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் தாயக உறவுகளே, உங்களுக்கு என் வணக்கம்! காலத்துயர் சுமந்தவர்களாக் கண்களில் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே தேக்கி வைத்துக் கொண்டு இங்கே...

முதல்வர் சி.வி கூட்டமைப்பில் விசனம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன என்ன என்பதை அப்பட்டமாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர். நான் இவற்றைச் சொன்னால் பெரும் பிரச்சனை ஆகிவிடும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இதை வெளிப்படுத்தாமல் இருக்க...

தமிழ்த் தேசிய அங்கீகாரமே பிரச்சினைகளுக்குத் தீர்வு! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்

தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்ற 4 விடயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், போர் நிறைவடைந்த பின்னரும் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை சிதைப்பதற்காக, தேசத்தின் அங்கீ காரத்திற்கு அடிப்படையான விடயங்கள் மீதான கட்டமைப்புசார் இன அழிப்பு நன்கு திட்டமிட்டவகையில்...

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2015  - தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய...

மாவீரர்கள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது  மாபெரும் பொதுக்கூட்டம்  வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில்  நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்   நினைவுவிடம் அமைந்துள்ள  தீருவிலில்...

தேச அங்கீகாரமே எமது திடமான நிலைப்பாடு-மணிவண்ணன்

எமக்கெதிராக பெரும்பான்னை அரசு தொடுக்கின்ற அடக்குமுறைகளை நாம் தடுக்க வேண்டுமானால் எமது தேசம் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கேள்வி நேரம் எனும் நிகழ்வில் தமது கட்சியின்...

சாவகச்சேரியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கைது ! நடந்ததென்ன?

1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் வீட்டிற்கு வீடு சென்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது (ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை இல்லை). அத்தோடு பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் அண்மையில் கட்சிகள் யாவற்றினதும் சம்மதத்துடன் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பொது இடங்களில் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்கும் அறிவித்தலை தேர்தல் ஆணையாளர்...

சாவகச்சேரியில் மக்களை சந்திக்க சென்ற த.தே.ம முன்னணி ஆதரவாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு விடுதலை மேலும் பலர் பொலிஸ் காவலில்!

31.07.2015 இன்று காலை சாவகச்சேரி மக்களை சந்தித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவாளர்களும் அங்குள்ள மக்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பொலிசார் தேர்தல் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்தி சாவகச்சேரியிலிருந்து வெளியேறுமாறு பணித்தனர். சட்டத்துக்கு புறம்பான முறையில் பொலிசார் அராஜகம் செய்ய முடியாது என...

ஆட்சிமாற்றத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க தயாராக இருந்தனர் இதை நிராகரித்தமையால் பகிஸ்கரித்தனர் – கஜேந்திரகுமார்

ஆட்சிமாற்றத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க தயாராக இருந்தனர் இதை நிராகரித்தமையால் பகிஸ்கரித்தனர் ஆனால் கூட்டமைப்பு நிபந்தனையற்று ஆதரவு கொடுத்தனர் இதன் மூலம் ஏதோ ஒரு வகையில் வெளிநாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றதில் தமிழ் மக்கள் தீர்வு குறித்து ஏற்பட்டிருக்கக்கூடிய நன்மையினை இழந்தனர்.எதிர்காலத்தில் இலங்கை அரசு மட்டுமல்ல கூட்டமைப்பும் தமிழ் மக்களிற்கு இழைத்த துரோகத்திற்கு பதிலளிக்க...

விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி, விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு...

கூட்டமைப்புக்கு ஆதரவில்லை – தேர்தலில் பக்கச்சார்பற்ற நிலை – விக்கினேஸ்வரன்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தான் நடுநிலைவகிக்கப்போவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இங்கிலாந்தில் உரையாற்றும்போது கூறியது போல், வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின்...

மக்களின் சுய நிர்ணய அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தியாகங்களிற்கு பெறுமதி கிடைக்கும் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும்...

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா சென்றனர்!-கிசோர்

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின்...

கோகிலவாணிக்கு சிவாஜிலிங்கம் ஆதரவு!ஓங்கி குரல் ஒலிக்க ஆதரிக்க கோரிக்கை!!

கட்சி எல்லைகளிற்கப்பால் பெண்போராளியென்ற வகையிலும் தனது இரண்டு சகோதரர்களையும் மாவீரர்களாக மண்ணிற்கு கொடுத்த சகோதரியென்ற வகையிலும் கோகிலவாணிக்கு தனது ஆதரவையும் வரவேற்பினையும் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எவ்வாறு வடமாகாணசபை உறுப்பினரான அனந்தியால் ஜெனீவர் வரை சென்று உரையாற்ற முடிந்ததோ அதே போன்று கோகுலவாணியாலும் முடியுமெனவும் அவர் தெரிவித்தார். இணையத்தளமொன்றுக்கு வழங்கிய...

உலகெங்கும் இணையம் -கூகிளின் பலூன் தொழில்நுட்பம்

இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற 2014 சூன் 15 அன்று, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சூரிய கல தகடுகளுடன், அன்ரெனாக்கள், கணினிகள், இலத்திரனியல் சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், மின்கலங்கள்...

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே நாம் போராடுகின்றோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள்செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (23) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்அறிமுகமும் ஊடகவியலாளர்சந்திப்பும் நடைபெற்றது. அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...
Loading posts...

All posts loaded

No more posts