- Monday
- June 23rd, 2025

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்குமாக தமிழர் விடுதலை கூட்டணி குரல் கொடுக்கும். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் தலைநகர் கொழும்பில் தொன்மையான தமிழ் கட்சி என்றவகையில் பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். இன்று பேரினவாத கட்சிகளோடு இணைந்து மற்றவர்கள் போட்டியிடுகின்ற நிலையில் நாம் தமிழ் கட்சியும்...

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும், எங்கள் தேவைகளையும் பெற்றுக் கொள்வோம் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை மாலை யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போதே...

சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ்காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு...

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,“கடந்த அதிபர் தேர்தலில்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும். அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும்.என அவர்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப்பணியகம் சனிக்கி்ழமை (18) திறந்துவைக்கப்பட்டதோடு திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.திருகோணமலை திருஞானசம்பந்தன் வீதியில் அமைந்துள்ள நடுவப்பணியகத்தை தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருமலை மாவட்டமுதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் திருமலை லட்சுமி நாராணயன் கோயில்உரிமையாளர் ராதாகிஸ்ணன் ஆகியோர்...

தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் வேட்பாளர்களை தமிழ்மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் – சி.கஜேந்திரகுமார்
தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார். கட்சியின் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து பேசுகையில் தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே...

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை என்று கூறிய அதேவளை கூட்டமைப்பினை தனது உரையில் கடுமையாக சாடினார். உரையின் முழு வடிவம் அமெரிக்க பயணத்தின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து...

தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியாகிஉள்ளன. வாக்காளர்கள் சைக்கிள் சின்னத்தின் முன்னாலும் பின்னர் விரு்ம்பிய 2 வேட்பாளர்கள் முன்னாலும் வாக்களிக்க முடியும் (1) விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்) (2) சி.ஆனந்தி (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன்...

இன்று கொழும்புமாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.அதில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள மூவின மக்களையும் ஒருங்கிணைத்து யாதி பேதங்களையும் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து தமிழர் விடுதலைக்கூட்டணி ஜனநாயக கட்சியோடு...

நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் முன் முக்கிய போட்டித்தெரிவுகளாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இருக்கின்றன. வழமைபோல இணையத்தளங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இன்று ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைந்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களின் கருத்துக்கள் வாக்காளர்களிள் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வருகின்ற 18.7.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கலை அம்பாறையில் ஆரம்பித்து வன்னியில் முடித்தது. தற்போது பிரச்சாரக்கூட்டத்தினை தமிழர்களின் கோட்டை எனப்படும் கோணமலையில் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் திருகோணமலையில் முன்னணியின் தலைமைச்செயலகமும் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. மக்களை திரண்டுவந்து தமிழ்தேசிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை...

இலங்கைத் தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் விபரம்.. 01. திரு.சி.க.சிற்றம்பலம் 02. திரு.சொலமன் சிறில் 03. திரு.மயில்வாகனம் தேவராஜ் 04. திரு.சூ.செ.குலநாயகம் 05. திரு.வி.கனகநமநாதன் 06. திரு.அ.குணபாலசிங்கம் 07. திருமதி.நாச்சியார் செல்வநாயகம் 08. திரு.அந்தோனிப்பிள்ளை மேரியம்மா 09. திருமதி.மேரிகமலா குணசீலன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த...

நாம் கடந்த 5 வருடங்களாக என்ன செய்தோம் என்று கேட்பவர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு போராட்ட களத்தினை திறந்து வைத்தவர்கள் நாமே. முல்லைத்தீவு கேப்பாபிலவில் முழுக் கிராமம் பறி போன போது தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று சொல்லிக் கொண்டோர் மௌனமாக இருந்தனர். நாமே அம்மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினோம்...

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதையடுத்து, குழப்பமடைந்த, மகிந்த ராஜபக்ச தரப்பு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவைப் பயன்படுத்தி இன்று கட்சியின் மத்திய...

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். ”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது. இந்தச் சூழலில், இதுபற்றி...

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் வன்னியில் வேட்புமனுவை கையளித்தனர். இதில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன், சிவரதி ராஜ்குமார், வீ.திகாஸ் விக்னேஸ்வரன், இந்திராணி விவேகானந்தன், செ.பாலசுப்பிரமணியம், க.பார்த்தீபன், ப.ஜனன், முன்னாள் போராளியான இ.பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஊடகங்களுக்கு கருத்துத்...

All posts loaded
No more posts