- Sunday
- May 17th, 2026
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தி, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கியே ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ”இந்தவிடயம் தொடர்பாக நான் பாதுகாப்புச் செயலாளருடனும்,...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, விசேட பொலிஸ் விசாரணை குழுவொன்று அவுஸ்ரேலியா செல்லவுள்ளது. குறித்த சந்தேகநபரை நாடுகடத்த தேவையான ஆவணங்களுடன் அந்நாட்டிற்குச் செல்லும் விசாரணைக் குழு, அந்நாட்டு அரசாங்கத்திடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. இக் குழுவினர் இவ்வாரம் அவுஸ்ரேலியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமந்திரனை...
நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20...
அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச...
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார். குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. பொலிஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண...
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் மழை...
“யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளமொன்றில் வெளியாகிய செய்தி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார். யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில்,...
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும். பாடசாலைகள் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. எதிர்வரும்...
நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவிற்கு அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக இந்த திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்படவுள்ளது. நாட்டின் பல இடங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை கருத்திற்கொண்டு...
இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் கிளிநொச்சி மல்லாவி வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானப்பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியினால் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 65வது படைப்பிரிவின் கீழுள்ள சுமார் 500 படை வீரர்கள் இந்த சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலை வளாகத்தினை அழகுபடுத்தும் வகையில் 150 பூச்சாடிகளை...
சிறு குழுக்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக, யுத்தத்தில் உயிர்களை பறிகொடுத்து துன்பப்படும் மற்றும் ராணுவ ஆதிக்கத்தால் அவலப்படும் பெண்கள் வாழ்கின்ற இடங்களில் முப்படைகளை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாதென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக யாழில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள பொலிஸ்மா அதிபர்...
வவுனியா போகஸ்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அநுர சாந்த சரத்குமார என்பவருக்கு,...
யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கமையவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் திருவிழாவையும் முன்னிட்டே பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம் என...
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் சமூகத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்...
மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு...
கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. இந்த விசாரணைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும்...
கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற இணையத் தள நிலையங்களை நாடுகின்ற சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரத்திலே பல இணையத் தள நிலையங்கள் இயங்குகின்றன. இவ் இணையத் தள நிலையங்களை நோக்கி சிறுவர்கள் கூடுதலாக செல்வதாகவும் இதன் காரணமாக பெற்றோர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச்...
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாகுழுவினைச் சேர்ந்த...
கிளிநொச்சியில் தனியார் பேரூந்து ஒன்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தெரேசா ஆலயம் முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. தெரேசா ஆலயத்திற்கு முன்பாக வீதியினை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றினால் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து...
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்த படத்தை தொடர்ந்து...
Loading posts...
All posts loaded
No more posts
