Ad Widget

கிளிநொச்சியில் வாகன விபத்து: சாரதி உட்பட நால்வர் படுகாயம்

கிளிநொச்சியில் தனியார் பேரூந்து ஒன்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தெரேசா ஆலயம் முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தெரேசா ஆலயத்திற்கு முன்பாக வீதியினை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றினால் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கரடிப்போக்கு நோக்கி சென்றுகொண்டிருந்த பிக்கப் வாகனம் சடுதியாக தடுப்பை பிரயோகிக்க நேர்ந்துள்ளது. இதன்காரணமாக தூக்கி வீசப்பட்ட பிக்கப் வாகனம் எதிரேவந்த பேரூந்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பிக்கப் வாகனத்தின் சாரதி உட்பட மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts