கிளிநொச்சியில் காவற்துறையின் இலஞ்ச ஊழலை எதிர்த்து மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்!!

கிளிநொச்சியில் முதியவர் ஒருவர் காவற்துறையினர் இலஞ்சம் பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில், இன்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30ற்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் மேடை...

ரூபா 450 மில்லியனில் கிளிநொச்சி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நட்டார் பிரதம நீதியரசர்

கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதி 450 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (3) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று (03-09-2018) காலை 09.00 மணிக்கு இந்த அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில்...
Ad Widget

மாங்குளம் அருகே மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா...

மன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டனவா?

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுக்கும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சடலங்கள் ஆடைகள் அற்ற நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 62ஆவது நாளாகவும் மன்னாரில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும்...

வீடமைப்பு – உட்கட்டுமான நடவடிக்கையை ஒருங்கே மேற்கொள்ளவும்! – நிதிக்குழு கூட்டத்தில் எடுத்துரைப்பு

வடக்கிலுள்ள 4500 ஏக்கர் காணிகள் மக்களிடம் எப்போது கையளிக்கப்படும் என்பதை உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுவதால், தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நிதிக்குழுவின் தலைவர் மு.சுமந்திரன்...

பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கவும்: சுகிர்தன்

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அச்சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்குப் பகுதியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்படாத பகுதிகளிற்குள் அரச கட்டடங்கள்...

பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

50 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளைக் காலை தொடக்கம் ஒரு இறாத்தல் பாணின் விலை 65 ரூபா என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “கோதுமை...

“சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை” – எம்.ஏ.சுமந்திரன்

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து கடந்த சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...

அரசியல் தீர்வை வேகமாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

அரசியல் தீர்வை எவ்வளவு வேகமாக பெற்றுத் கொடுக்க முடியுமோ எவ்வளவு வேகமாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் விடுத்துள்ள மின்னஞ்சலில் வடக்கு முதலமைச்சர் இதனை கூறியுள்ளார். உடனே அரசியல் தீர்வு அவசியம் என்று கூறிய தனது வாசகம், சம்பந்தன் இந்த வருட முடிவுக்கு முன்னர்...

கோதுமை விலை குறைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

வரி திருத்தம் மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சி என்பவற்றை கருத்திற் கொண்டு கோதுமை மாவின் விலையை கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனம் 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான...

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன் – சம்பந்தன்

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வடக்கு முதல்வர் மனதளவில் தயார் என்றால் மாற்று அணி தயாராகும்: சுரேஷ்

வடக்கு முதல்வர் தயாராக இருக்கின்றார் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியை கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாட முடியும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வாராந்த நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இரண்டாவது...

ஜனாதிபதியின் பிறந்தநாள் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகின்றார். இந்தவகையில் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு நாடளாவிய ரீதியில் பல சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசியலில் 1989 ஆம் ஆண்டு நுழைந்த மைத்திரிபால சிறிசேன, இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வாண்டே...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விலைபோய்விட்டனர்: கடற்றொழிலாளர் சமாச தலைவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள் என வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். வட.மாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாராட்சி...

தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பின் தங்களது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதாலேயே தாங்கள் பிரிந்து செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அரசியல் யாப்பின் ஊடாகவே இந்த பிரச்சினையை...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் ஆகக் கூடிய சில்லறை விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு!

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள்...

இலங்கை இராணுவம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது: ஐ.நா.ஆணையாளர்!

இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அவர், இலங்கை தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு...

கட்சி அரசியலை விடுத்துச் செயற்படுவதே சிறந்தவழி – முதலமைச்சர்

கட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை...

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவரது ஒப்புதல் வாக்கு...
Loading posts...

All posts loaded

No more posts