- Monday
- May 11th, 2026
முல்லைத்தீவு மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நிலத்தில் மறைந்து கிடந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று (புதன்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். வவுனியா பறநாட்டாங்கல்லை சேர்ந்த இராசேந்திரன்...
செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கிருஷாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன்போது நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. செம்மணி படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற...
யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றினை போன்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்....
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தொழிற்சங்கத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பளத்தை அதிகரிக்கக் கோரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் மற்றும் தென் மாங்கங்களில் பல பிரதேசங்களிலும்...
வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கண்ணிவெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக...
யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால்...
‘இன்னும் எத்தனை பெண்கள்? இனிமேல் வேண்டாம்…!’ என பதாதைகளை ஏந்தியவாறு யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்...
நல்லூர் உற்சவ காலத்தின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் பெறுகின்றார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள். இது தொடர்பில்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை துண்டிக்கும் வகையிலான செயற்பாடுகளையே மகாவலி அதிகார சபை முன்னெடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நல்லாட்சியில் பொதுமக்களின் காணிகள் அதிகளவில்...
இனிவரும் காலங்களில் பரத நாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது. அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் ‘தெய்வீக சுகானுபவம்’...
சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு வடக்குப் பேருந்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதையடுத்து வடக்கில் இன்று இ.போ.ச. பேருந்துச் சேவைகள் முடங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெற்கில் இ.போ.ச. ஊழியர்கள் நேற்றுமுன்தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர். எனினும் நேற்று வடக்கு...
யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை கூட்டங்கள் நடைபெற்றன. சந்தித்து...
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த...
வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறாகும் என அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மேலும், சமஸ்டித் தீர்வு வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் எவ்வாறாயினும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு சிலர் தற்போது அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையான சாடினார்....
வடக்கு முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்வாறு எதிர்வரும் 7 ஆம் திகதி நாங்கள் இருவரும் சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் மூலமே தான் அறிவதாகவும் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர்...
அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரந்தம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர், அனுப்பிவைத்திருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்ததாவது, “அரசாங்கம் தருவதை...
விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தனி ஈழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில், வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். இருப்பினும் குறித்த கோரிக்கை சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டமையால் அதனை நிராகரித்த பதில் நீதிவான் வழக்கை நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். கடந்த ஜூன்...
மீள்குடியேற்றத்திற்கு போதுமான நிதி இல்லாமையினால் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நடாளுமன்ற நிதிக்குழு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தது. இதன்போதே மேற்படி...
Loading posts...
All posts loaded
No more posts
