சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு வடக்குப் பேருந்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதையடுத்து வடக்கில் இன்று இ.போ.ச. பேருந்துச் சேவைகள் முடங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளப் பிரச்சினை உள்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெற்கில் இ.போ.ச. ஊழியர்கள் நேற்றுமுன்தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர். எனினும் நேற்று வடக்கு இ.போ.ச. பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தன.
இந்த நிலையில் தெற்கில் நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதால் வடக்கு மாகாணத்திலும் இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை, அடிப்படை வேதனத்தில் இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.