- Friday
- May 8th, 2026
யாழ் மாநகர எல்லைக்குள் தமிழருக்கு மட்டும்தான் காணி நிலங்களோ அன்றி கட்டடங்களோ வழங்கப்படவேண்டும் என்ற சட்டவரையறை எதுவும் கிடையாது. ஏனைய தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வந்து இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இது தமிழருக்கு மட்டுமான பகுதி அல்ல என யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் மாநகர சபையில் யாழ் நகரக்குளப்...
மன்னார் மனித எச்சங்களின் ஆறாவது மாதிரியிலிருந்து போதிய அளவான மரபணு பொருட்களைப் பிரித்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், குறித்த அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லையென காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது குறித்த மாதிரியின் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், விரைவில் அதன் அறிக்கையும் நீதிமன்றிற்கும், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக...
கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய செயற்கைக்கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த...
போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை கட்டிகொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா இதனை சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் திங்களன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வினை முன்னிறுத்தி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ், மோதர பாடசாலைகளை மையப்படுத்திய மொழிக்கற்கை பயிற்சி, தேசிய மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) வட...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கொக்குவில், இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று காங்கேசன்துறை, பலாலி, மானிப்பாய், பிறவுன் மற்றும் பருத்தித்துறை வீதிகளிலும் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்த்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியனந்தம் (28 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன்...
கல்கிஸ்ஸை, காங்கேசன்துறை, மருதானை - மாத்தறை வரையான ரயில் சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. டீசல், மின்சார ரயில் எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த ரயில்சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவுக்கு சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல்...
யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் நேற்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் வைத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும்...
இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் கொழும்பிலுள்ள ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் குருதி சிந்தி...
எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் சிவில் சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் எதிர்வரும் 25ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த...
.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர்...
யாழ்ப்பாணம் வந்துள்ள மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார். அத்துடன் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ்...
தமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று(வியாழக்கிழமை) காலை விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை...
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண, எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் எந்தவொரு பயனும் இல்லை என்று ஈ.பி.ஆர்.எப். கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும், அர்த்தமற்ற ஆதரவினை வழங்கி அரசாங்கத்தை...
சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், பொலிஸாரை அறிவுறுத்தினார். கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான செய்தியை காணொலிப் பதிவைச் செய்துகொண்டிருந்த ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை...
யாழ் குருநகர்ப்பகுதியிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காணாமல் போயுள்ள மீனவர்களும் அவர்களில் அடங்கலாம் என நம்பப்படுகிறது....
Loading posts...
All posts loaded
No more posts
