Ad Widget

குருநகர்ப்பகுதியிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை

யாழ் குருநகர்ப்பகுதியிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காணாமல் போயுள்ள மீனவர்களும் அவர்களில் அடங்கலாம் என நம்பப்படுகிறது.

பாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை குருநகர் இறங்குதுறையில் இருந்து விசைப்படகு மூலம் கடலுக்கு சென்றுள்ள நிலையில் நெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

எனினும், குருநகர் மீனவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் காணாமற்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts