தேர்தலை பகிஸ்கரிப்பதா? அல்லது சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவா? ஆனந்தசங்கரி கேள்வி

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. தென் இலங்கை அரசியற் தலைவர்கள் அமைச்சர்கள் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது - ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வு என்று திரும்பத்திரும்ப கூறியும்...

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் யாழ் சர்வதேச விமான நிலையம்!!

நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும்சகதியுமாக மாறியுள்ளன. கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. யாழ் விமானநிலையம் அவசரகதியில் அமைக்கப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்திருந்தது. இந்த நிலையில் கனமழை...
Ad Widget

கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது!! யாழில் கஜேந்திரகுமார் பரபரப்பு தகவல்!

ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. கோட்டாபய சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்தால், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட 13 அம்சங்களையும் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். கோட்டா இந்திய சார்பு நிலையெடுத்தால், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவோம் என்ற செய்தியை இந்தியா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவை வியாழனன்று கூட்டமைப்பு அறிவிக்கும்!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பன வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர்...

அங்கஜன் எம்.பியின் 4 அம்சக் கோரிக்கையை கோத்தாபய ஏற்பு!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (ஒக்.20)...

நீராவியடி விவகாரம் – ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. அதற்கமைய ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த...

யாழில் வயோதிபப் பெண் வெட்டிக்கொலை – பொலிஸார் விசாரணை

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதுடைய குறித்த பெண்ணின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டு வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர். மேலும்...

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு – அகழ்வு நடவடிக்கை இன்று!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவுள்ளன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்படவுள்ளன. சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது. இதன்போதே, குறித்த மனித எச்சங்கள்...

கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் படைத்தளபதிகள் யாழில் களமிறக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போரின்போதும் போருக்குப் பின்னரான காலகட்டத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றிய, யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த, இரண்டு மேஜர் ஜெனரல்களே இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்....

பாடசாலை மாணவனின் உயிரைப் பறித்த பிக் கப்!! சாரதியை காப்பாற்ற பொலிஸார் மக்கள் மீது தடியடி!!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர்....

வேட்பாளர்கள் சிலர் தொடர்பில் பெப்ரல் அமைப்பு வௌிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரின் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது. அதன்படி, 35 வேட்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எவ்வாறாயினும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை தொடர்பு கொண்டு வினவிய போது, சில வேட்பாளர்கள் வேறு சில பலன்களை எதிர்ப்பார்த்து இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார். ஜனாதிபதி...

யாழ். மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ஆதரவாளர்கள் மிரட்டல்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அறிவுறுத்தல்- தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த மாநகர சபை உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள் மிரட்டியதுடன் , நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் 50 – 5048 எனும் இலக்கமுடைய வெள்ளை...

ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வருகிறது

ரயில்வே ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நண்பகல் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தொடருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை மாலை முதல் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே...

சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல் – எதனையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சிவாஜி

தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி...

அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது – 35 வேட்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி...

பணிப்புறக்கணிப்பை கைவிடுமாறு அரச துறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுரை!!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் உள்பட அனைத்து அரச துறை ஊழியர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அரச நிர்வாக சேவை, பல்கலைக்கழக...

ரயில் சேவையை நடத்த இராணுவத்துக்கு அனுமதியளித்தார் அமைச்சர்

தொடருந்து இயந்திர இயக்குனர்களாக (சாரதிகள்) இராணுவ அணியை கடமைக்கு அமர்த்த போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி பிரகடனப்படுத்திய நிலையில் போக்குவரத்து அமைச்சு இந்த அனுமதியை ரயில்வே பொது முகாமையாளருக்கு வழங்கியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இயந்திர இயக்குனர்கள், கட்டுப்பாளர்கள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய அதிபர்கள்...

சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – செல்வம் எச்சரிக்கை!

எமது கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மீள் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் அதற்கான பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பை...
Loading posts...

All posts loaded

No more posts