Ad Widget

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் யாழ் சர்வதேச விமான நிலையம்!!

நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும்சகதியுமாக மாறியுள்ளன.

கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ் விமானநிலையம் அவசரகதியில் அமைக்கப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.

இந்த நிலையில் கனமழை காரணமாக யாழ் விமான நிலையத்தின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. விமான நிலையம் அமைக்கப்பட்டபோது, அதிகளவான கிறவல் பாவிக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் தேங்கியதையடுத்து அந்த பகுதி சேறும் சகதியுமாகியுள்ளது.

Related Posts