Ad Widget

யாழில் வயோதிபப் பெண் வெட்டிக்கொலை – பொலிஸார் விசாரணை

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதுடைய குறித்த பெண்ணின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டு வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts