தென்பகுதியில் பெரிய வெங்காயத்திற்கு வழங்கும் இலவச காப்புறுதி வடபகுதி சிறிய வெங்காயச் செய்கைக்கு இல்லை!!

யாழ்ப்பாணத்தில் செய்கை பண்னப்படாத பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி உண்டு ஆனால் மாவட்டத்தில் அதிக விவசாயிகளினால் மேற்கொள்ளும் சிறிய வெங்காயச் செய்கைக்கு இன்றுவரை இலவச காப்புறுதி கிடைப்பதில்லை என யாழ்ப்பாண மாவட்ட விவசாய சம்மேளணத் தலைவர் கந்தையா - தியாகலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் கடந்த ஆண்டில் முதன்...

யாழிற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...
Ad Widget

பங்குத்தந்தையை பொலிஸார் தாக்கிய விவகாரம் – மறைமாவட்ட கத்தோலிக்க சமூகம் கண்டனம்

மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும் அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமுகம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறை மாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர்...

நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை அறிவித்தார் ஜனாதிபதி

2020 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றம் கூடும் என கூறினார். இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசியத்தில் சாதித்தனர் தெல்லிப்பளை மகாஜனா மங்கையர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரி மற்றும் பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது மகாஜானாவின் வெற்றிக்கொலினை தேசிய அணி வீராங்கனை சாணு அவர்கள் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இப்...

நேற்று உறுதியளித்தபடி இன்று நடவடிக்கையில் இறங்கினார் அங்கஜன்!!

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெற இது வரையிருந்த டோக்கன் சிஸ்டம் இல்லாதொழிக்கப்பட்டு , மருத்துவ சான்றிதழுக்கான விண்ணப்ப படிவங்களில் திகதியிடப்பட்டு வழங்கப்படவுள்ளன. திகதியிடப்பட்ட திகதியன்று சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை பெற முடியும். இதற்கான பரீட்சார்த்த...

புலைமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் நேற்று(புதன்கிழமை) இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் ரோயல் கல்லூரி 180 புள்ளிகளும், டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி 167 புள்ளிகளும், இசிப்பத்தன கல்லூரி 164 புள்ளிகளும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 154 புள்ளிகளும், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி 175 புள்ளிகளும், ராமநாதன்...

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கைது!!

அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ...

கோத்தாபய கொலை முயற்சி – 13 ஆண்டுகளுக்கு மேல் தடுப்பிலிருந்த அரசியல் கைதி விடுவிப்பு

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றையதினம் விடுதலை செய்தது. 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்களிலில் வந்த ஒருவரால் தற்கொலைக்...

யாழ்.பல்கலை. பழைய மாணவர்களுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெறும் என்று ஒன்றிம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்!

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள PMS சாள்சை நியமிப்பதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் இலங்கை...

மழையுடனான வானிலை மேலும் தொடரும்!

நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்...

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டம்!

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் இந்த திட்டத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேச திட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கான தகைமைகளை பூர்த்தி செய்தும் அது கிடைக்காத...

இந்தியாவின் உதவியுடன் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதே – சம்பந்தன்

புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதே. அதற்கு சர்வதேசமும் இந்தியாவும் உதவியன ” என தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு – இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது கொள்கை – இலக்கை அடைய எதிர்காலத்தில் என்ன...

ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவின் அபிவிருத்திக்கு தலா 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

நாடுமுழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் தலா 5 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களை ஜனவரி மாதத்துக்கு ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். நேற்று அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...

மருத்துவ சான்றிதழ்களை பெறுவதற்கு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை – அங்கஜன்

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெறுவதற்கு யாழ்.மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்டத்தில் உள்ளோர் சாரதி அனுமதி பத்திரம்...

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்திற்க்கான வைத்திய பரிசோதனையில் 55.35 வீதமானோர் சித்தியடையவில்லை!!

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாகன சாரதி விண்ணப்பதார்களுக்கான வைத்திய பரிசோதனையில் 55.35 சதவீதமானோர் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். இதற்கு காரணம் கண் பார்வை குறைபாடு என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த வைத்திய பரிசோதனையின் எண்ணிக்கை 872,769...

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்!

வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியது. கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...

யாழ்.பஸ் நிலையத்துக்குள் முதியவரை மோதிய பஸ்!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்து மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவத்தையடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்பட்ட பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது....
Loading posts...

All posts loaded

No more posts