சாவகச்சேரி நகரில் பற்றி எரிந்த வணிக நிலையம் – கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்

சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீயில் விபத்துக்குள்ளாகியது. அங்கிருந்த சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் தீக்கிரையகியுள்ளன. சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள வணிக நிலையத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு 6.45 மணியளவில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே காரணம் எனத் தெரிவிக்கப்பட்ட போதும்...

யாழில் பல்வேறு இடங்களில் நினைவுகூரல் நிகழ்வு!

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழர் தாயகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 9.35 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது....
Ad Widget

யாழில் விலைக் கட்டுப்பாட்டு சோதனை அதிகாரிகளுடன் முரண்பட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் விலைக் கட்டுப்பாட்டு சோதனை அதிகாரிகளுடன் முரண்பட்ட வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டுவிலை அறிவிக்கப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் உள்ள விலை கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பொலிஸார் மற்றும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை)...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை வெளியிட நடவடிக்கை

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப் பரீட்சையில் மொத்தமாக 3லட்சத்து 37 ஆயிரத்து 704 மாணவர்கள் வரை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்...

சிவாஜிக்கு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு அழைப்பு

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி அதாவது நாளை குறித்த பிரிவின் கொழும்பு நன்காம்...

யாழில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் – பலர் காயம்

யாழ். – பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன், அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (பதன்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார்...

உலக வரலாற்றில் கருப்பு அத்தியாயத்தை எழுதிய சுனாமிக்கு வயது 15!

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உலக மக்களையே உருக்குளைய வைத்த சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில...

பொதுத் தேர்தலின் பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஐதேமுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயார் – சுமந்திரன்

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசிய முன்னணியிடன் இணைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசும் போது அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பொதுத்...

தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன்

அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 33 நாள்களே நிரம்பிய பசுக்கன்றுக்குட்டி துள்ளித்திருந்து வேலியில் இருந்த இடைவெளியால் அயல் வீட்டு வளவுக்குள் சென்றுள்ளது. அதனைக்...

பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!

பண்டிகை காலங்களில் அரிசி, பருப்பு, மிளகாய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 நாட்க்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மனித பாவனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அரிசி, பருப்பு, மிளகாய் தூள்...

தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு...

நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது – பிரதமர்

நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது காலத்தை செலவளித்து சுயமாக முன்வந்து காலத்திற்கு ஏற்ற வகைகளில் மக்கள் விரும்பும் சித்திரங்களை இந்த இளைஞர் யுவதிகள் வரைந்துள்ளதை தாம் காணக்கூடியதாக இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இவர்களை ஊக்குவிப்பது அனைத்து பிரஜைகளினதும்...

யாழில் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனுக்கு அதியுயர் மரியாதைகளுடன் மகத்தான கெளரவம்!!

தென்மராட்சி இலக்கிய அணி நடாத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-05.45 மணி முதல் யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க் கோட்டத்தில் இடம்பெற்றது. குறித்த விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ‘அருட்செல்வர்’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்....

வழிப்பறிக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்கொலை முயற்சி!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்ய முற்பட்ட சந்தேகநபர் நஞ்சருந்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பலாலி விமானப் படைத் தளத்தில் பணியாற்றும் அலுவலகர் ஒருவர் தனது...

சிங்கள மொழி பிறக்க முன்னரே சைவத் தமிழர் இலங்கையில் இருந்தனர் –சி.வி.விக்னேஸ்வரன்

சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரே சைவத் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்தனர் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே...

யாழில் விமானப் படையினரிடம் திருட்டு?

பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒருவரிடமிருந்து பணம் நகைகள் இனம் தெரியாத மர்ம கும்பலால் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உரெளு அம்மன் கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானப்படை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலனறுவை செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் இன்று...

ரணிலும் விரைவில் கைது செய்யப்படுவார்?

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை போன்று பிணைமுறி மோசடி தொடர்பாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவும் கைது செய்யப்படுவாறென அவர் மேலும் தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சம்பிக்க ரணவக்க...

வடக்கு மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் பதவியேற்பு

வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பிஎஸ்எம் சாள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை நேற்றுமுன்திம் ஒப்புதலை வழங்கியிருந்த்து. இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக அவர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...

யாழ் பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார். மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக...

தொலைபேசி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

ஆபிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலர் premium callback scam என்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இலங்கையில் தொலைபேசிகளை பயன்படுத்துவோரை இலக்காக கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்படும் தவறிய அழைப்பை (Missed calls) விடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். 10235,646,2532 ,10212,621-001782 இவ்வாறான இலக்கங்களுக்கு பதிலளிக்கும் பொழுது இவர்களது...
Loading posts...

All posts loaded

No more posts