Ad Widget

கோரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 27 வரை ஊரடங்கு அவசியம்!!

நாட்டில் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏப்ரல் 27ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

“கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது.

இந்த மருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடையும்.

இதனிடையே, அரச வைத்தியசாலைகளில் கிளினிக்கிற்காக பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (29) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக்காக சீனா, உபகரணங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது. இந்த உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்” என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Related Posts