Ad Widget

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் – சி.யமுனாநந்தா

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோணா தொற்றானது மீண்டும் சமுகமட்டத்தில் பரவும்...

இலங்கையில் சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3402 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர். திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன....
Ad Widget

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. இதுத் தவிற நேற்றைய தினம் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து...

கொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை!!

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக Meegahalande Durage Lamawansa மேலும் கூறியுள்ளதாவது, “நான் இலங்கையிலிருந்து மாஸ்கோ...

டோகாவிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணம் வாசிக்கு கோரோனா!!

டோகா நாட்டிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தனங்களுக்கு முன்பு டோகாவிலிருந்து நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று மாலை கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி தற்போது சிகிச்சைக்காக கோரோனா சிகிச்சை...

கொரோனா அச்சம் – மன்னார் செளத்பார் பிரதான புகையிரத நிலையம் மூடல்!!

மன்னார் பிரதான புகையிரத நிலைய பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத்திலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, வவுனியா பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி வந்த...

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசி இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது!!

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக்-5” தடுப்பூசி இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு என்று ரஷ்யா உலக நாடுகளுக்கு அறிவித்தது. இப்போது, ​​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட் -19 தடுப்பூசி இந்த வார தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று...

யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாறாக 100 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை – எவருக்கும் கோரோனா தொற்று இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி...

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...

யாழ். இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை அண்மைக்காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்கவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார பிரிவு கூறியிருக்கின்றது.

கோவிட் -19 நோய்ப் பரவலுக்கு ஏதுநிலை ஏற்படுத்தினர் -யாழில் ஐவரிடம் தண்டம் அறவீடு!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி பணிமனைக்கு உள்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோகர் ஒருவரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான்...

கொரோனா தொற்று: மருத்துவமனை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

கம்பஹா – ராகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொண்ட பிற ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதடி சித்த மருத்துவ பீட மாணவிக்கு கொரோனா அறிகுறி!

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலநறுவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னரேயே அவர் பொலநறுவையில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் உட்பட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதால் அவருக்கு பிசிஆர்...

வடக்கில் கோரோனா பரவாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

“வடமாகாணத்தில் கோரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் கோரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன”இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி அறிக்கையில்...

கிளிநொச்சி மக்களே அவதானம்! – பிராந்திய சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்து

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்....

கொரோனா தொற்று அச்சம் – யாழ். பல்கலையின் தொழில்நுட்ப பீடம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும்...

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா தொற்று!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த அவர்களின் உறவினர்களே இவ்வாறு...

வடக்கிலும் கொரோனா இரண்டாம் அலை ஆபத்து: எச்சரிக்கிறார் வைத்தியர் யமுனானந்தா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமகாணாத்தில் கொரோணாவின் இரண்டாம் அலை பரவகடகூடிய ஏது நிலை உள்ளது. மக்கள்...

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் ஆபத்து – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களில் 500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது....
Loading posts...

All posts loaded

No more posts