Ad Widget

கண், மூக்கு, தொண்டை – சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள்

கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் பலவற்றை வழங்கியுள்ளனர்.

கொரோனா-வைரஸ் பரவியுள்ள காலகட்டத்தில் பொதுமக்களையும், குறிப்பாக பிள்ளைகளையும், முறையாக பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.

மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கொவிட்-நைன்ரீன் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காரணமாக, மருத்துவமனைகளில் ENT சிகிச்சை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பது முக்கியமானது என கண், மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் A.D.K.S.N. யசவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related Posts