BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர்!!

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத...

120 தமிழ் பொலிஸாருக்கு வடக்கில் இடமாற்றம்!!

வடக்கு மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது. வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும்...
Ad Widget

கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறைக்கிடையிலான இரு ரயில் சேவைகள் நிறுத்தம்

கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்­களின் சேவை­களை, இன்று முதல் நிறுத்­து­வ­தற்கு ரயில்வேத் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. இதன்­படி 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், இன்று செவ்­வாய்க்­கி­ழமை முதல் இயங்­க­மாட்­டாது. பய­ணி­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி கார­ண­மா­கவே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ரயில்வேத் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது. இதற்கு பதி­லாக இரண்டு ரயில்கள்...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி...

சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஐவர் கைது

சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு படகு மூலம் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த இலங்கையை சேர்ந்த 5 அகதிகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இங்கிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும்...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொலை!!

கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு மாகாண ஆளுநரை சற்றுமுன்னர் நியமித்தார் ஜனாதிபதி

வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் இணைத்து ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒப்புதலை வழங்கியிருந்தது. இந்த...

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்து சரமாரி வாள்வெட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்த்தானின் வாகனத்தை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள், சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய நிலையில், மயிரிழையில் நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் தப்பியிருக்கின்றார். வவுனியா பாவக்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து வவுனியா நோக்கி பயணித்தவேளை, அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்துள்ளனர். இதன்போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலையானார்!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. மேலும் வைத்தியசாலையில் சிகிச்சைகள் பெற்று வெளியேறியதன் பின்னர் குற்றப்புலனாய்வு...

வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன ஆகிய இருவருக்கும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சப்ரகமுவ மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறீ முனசிங்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா...

கொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட்டுக்கு சிக்கல்?

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை பயன்படுத்த கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது. அந்தவகையில் கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள பி 12 இல் இருக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பை அவருக்கு வழங்க கடந்த அரசாங்கம் அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி பின்னர், நாடாளுமன்ற...

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசன பங்கீடு தொடர்பில் இணக்கம் – மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முன்றாம் திகதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பின் ஊடகங்களிற்கு...

தனியார் நிறுவனங்கள் பிரதேசசபையில் முறைப்படி அனுமதி பெறவேண்டும் ; வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர்

வலிவடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் கம்பங்களை நிறுவி சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் பிரதேசசபையில் முறைப்படி அனுமதி பெறவேண்டும் என வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வீதி ஓரங்களில் கம்பங்களை நிறுத்தி சேவைகளை வழங்குதல் தொடர்பான அறிவித்தலில் சபைக்கு சொந்தமான வீதிகள் மற்றும் வீதி அபிவிருத்திசபை வீதி...

விசாரணையின்றி மரணச் சான்றிதழ் வழங்குவது பிழையானது – மாபெரும் போராட்டத்துக்கு சி.வி. ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவளித்துள்ளார். இது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் நாளை (இன்று 30.12.2019) காலை 10 மணிக்கு மாபெரும் கண்டனப்...

ராஜித எம்.பி. கைது!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன, குற்ற விசாரணைப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 10ஆஆம் திகதி, ராஜித சேனாரத்ன...

சம்பந்தன், சுமந்திரன் பேசும் ஐக்கியம் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல- சுரேஸ்

ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்...

ராஜித சிஐடியின் காவலில்!!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை என குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குற்ற விசாரணைப் பிரிவினரின்...

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா (வயது -41) என...

சேவைகளை வழங்கும் போது எவ்வித முறைகேடுகளும் இடம்பெறக்கூடாது – ஜனாதிபதி

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதேநேரம் அச்சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைகேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (26) பிற்பகல் மோட்டார்...

‘வெள்ளை வேன்’ விவகாரம்: ராஜிதவை கைது செய்வது ஏற்புடையதல்ல – சுமந்திரன்

‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல என கூறினார். ஐக்கிய தேசியக்...
Loading posts...

All posts loaded

No more posts