Ad Widget

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts