- Saturday
- May 2nd, 2026
யாழ்ப்பாணத்தில் திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் , விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக...
சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு...
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து தடுப்பில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது 28) என்பவரையே விசாரணைக்காக கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தேடி வந்த...
மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல்...
கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு...
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11ஆவது நபரும் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய அவர், கோரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை...
ஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும். ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சமூக மேம்பாட்டில் எந்தளவுக்கு உரிமைக்கான முன்னெடுப்புகள் பங்காற்றியதோ அதே அளவுக்கு கல்விசார் சமூகத்தின் முன்னெடுப்புகள், தீர்மானங்கள் பங்களித்துள்ளன. ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்கள் பல்வேறு முகங்களைக் கொண்டவை. கல்விசார் கட்டமைப்புகளை குலைத்தல், உரிமைக்காக...
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை ஜீலை 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் சீரற்ற சமூக நிலையில் நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்பங்களை உரிய திகதியில் அனுப்பமுடியாது போயிருந்தமையால் அதன் காலத்தை...
சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே...
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வீட்டுக் கடன் திட்டத்தை வழங்க நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காணிகளில் வீடுகளை அமைக்கும் வகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் இந்த வீட்டுக் கடன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை அமைச்சரவை இணைப்...
வடமராட்சி கிழக்கு, முச்சந்தியில் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் கிளைமோர் தயாரித்து பொருத்திய சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே விசாரணைக்காக நேற்றையதினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில்...
உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் இலங்கையில் எரிபொருள் விலை குறையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...
வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....
எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலமைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச் சந்தைகளையும் திறப்பதற்கு...
நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும். அத்தோடு தினமும் அதிகாலை 4 மணிக்கு தளர்தப்படும் ஊரடங்குச்...
“உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்” என்று மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக...
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் இனம் தெரியாத பொருள் ஒன்றை எடுத்துசென்று சுற்றியல் ஒன்றினால் அதனை தாக்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த பொருள் திடீர்...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 16 பேர் நேற்று (மே 27) புதன்கிழமை நள்ளிரவு (11.55 மணி) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் 150 பேர் கோரோனா தொற்றில் இனங்காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 137 பேருக்கு கோரோனா...
அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading posts...
All posts loaded
No more posts
